திருச்சி கிழக்கு மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகம் மர்ம நபர்களால் சூறை. கட்சியினர் திடீர்சாலை மறியலால் பரபரப்பு.
திருச்சி மாநகர மாவட்ட கிழக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் அலுவலகத்தை சில மர்ம நபர்கள் பட்டப்பகலில் அடித்து நொறுக்கி உள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் தகவலின் பெயரில் மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், வழக்கறிஞர் அணி நிர்வாகி பழனியப்பன், மாநில நிர்வாகி அரசு மற்றும் கட்சியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தை அடித்து சூறையாடிய மர்ம நபரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி விசிக கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து வந்து சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். இந்த சம்பத்தால் திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அலுவலகத்தை அடித்து சூறையாடியதாக சந்தேக இருந்தா ராஜா என்பவரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.