தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திரு தேரோட்டம் 20 ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி திருத்தேர் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் வரும் 20 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேர் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

திருத்தேர்

இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.

இங்கு பெருவுடையார், பெரியநாயகி, வராகி, நந்தியம்பெருமான், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர், நடராஜர், கருவூரார் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.

திருத்தேர் பராமரிப்பு பணிகள்

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் நான்கு ராஜவீதிகளில் வலம் வந்ததாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் இடையில் காலப்போக்கில் நின்று போன தேர் திருவிழாவினை மீண்டும் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் நடத்தினர். பின்னர் நாளடைவில் தேரோட்டம் நின்று போய்விட்டது.

திருத்தேர் பராமரிப்பு பணிகள்

அப்போது கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேரை தஞ்சை பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 2015-ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியால் தேர்திருவிழா தொடங்கி 4 ராஜவீதிகளில் பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட புதிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

தஞ்சை பெரியகோவிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த விழா 15 நாட்கள் நடைபெறும். அதன்படி கடந்த மாதம் 6 ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருத்தேர் பராமரிப்பு பணிகள்

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 20 ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் அன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. இந்த தேர் தரையில் இருந்து சிம்மாசனம் மட்டம் வரை 3 நிலைகளாக 16½ அடி உயரம் கொண்டது.

இந்த 3 நிலைகளிலும் மொத்தம் 231 பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. அப்போது தேரோட்டத்தையொட்டி தேர் அலங்கரிப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றது. இதை அடுத்து தேர் அலங்கரிப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

திருத்தேர் பராமரிப்பு பணிகள்

இன்று தேர் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு சுத்தம் செய்தனர். அதனை தொடர்ந்து தேர்ருக்கு வார்னிஸ் அடிக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. மேலும் தேர் சக்கங்களுக்கு கிரீஸ் வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here