பாலக்காடு மாவட்டம், அடுத்த நென்மாற, வல்லங்கி ஆகிய இரு கிராமத்திற்கு இடையே நெல் அறுவடை முடிந்து, அப்போது நடக்கும் போட்டித்திருவிழா மாசி மாதத்தில் நடக்கிறது.

மேலும் இந்த திருவிழாவில் ஆண்டுதோறும், மீனத்தின் 20 ஆம் தேதி அன்று மூல தெய்வமான நெல்லிங்குளங்கர பகவதி அம்மன் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

யானைகளை அலங்கரித்து அணிவகுப்பு

இங்கு 2 ஊர்களுக்கு இடையேயான நட்பு போட்டியாக தொடங்குகிறது. மேலும் இரு ஊர்கள் சார்பாக, ஊர்வலங்கள் மற்றும் சடங்குகள் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் இருக்கின்றன.

அப்போது மீனம் 1 ஆம் தேதி தொடங்கும் இந்த திருவிழாவில், “இரு ஊர்களும்” ஒரே மாதிரியான கும்மாட்டி, கரிவேலை போன்ற பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

இரவை வெளிச்சமாக்கிய வெடித்திருவிழா

பின்பு ஒவ்வொரு ஊர் சார்பாகவும், விழாவினை வியக்க வைக்கும் மூங்கில் மற்றும் மரத்தை பயன்படுத்தி “அன்ன பந்தல் அமைக்கப்படுகிறது. இந்த அன்ன பந்தல், பல்வேறு வண்ணங்களின் சிறிய பல்புகளால் மின் மயமாக்கப்பட்டுள்ளது.

அதன் அழகு பார்ப்பவரின் இதயத்தை கொள்ளை கொள்ளும் வகையில் அமைக்கப்படுகின்றன. அப்போது இரு ஊர் சார்பாக யானைகளை அலங்கரித்து, அணிவகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

இரவை வெளிச்சமாக்கிய வெடித்திருவிழா

அப்போது யானைகள் கோவிலை நோக்கி செல்லும் போது ‘பஞ்ச வத்தியம்’ பாண்டி மேளத்தை இசைக்கலைஞர்கள் போட்டி போட்டு நிலம் அதிர அடிப்பது பிரமிக்க வைக்கிறது.

இதனால் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வெடித்திருவிழா இன்று நடைபெற்றது. அதில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெடித்திருவிழாவை பார்க்க வந்திருந்தனர்.

இரவை வெளிச்சமாக்கிய வெடித்திருவிழா

அப்போது இன்று நடந்த வெடித்திருவிழாவில் வானவேடிக்கைகள் பார்ப்பவர் கண்களை பிரமிக்க வைக்கும் வகையில், பூமி அதிர, வானம் மிளிர பட்டாசுகள் பல வண்ணங்களில் வெடித்துச்சிதறியது. இது நென்மரா வல்லங்கி வெடித்திருவிழாவில் இரவு வெளிச்சமாக காட்சி அளித்தது.

மேலும் வானவேடிக்கைகளை மிகவும் ஆடம்பரமாகவும், தனித்துவமாகவும் புதிய வழிகளை கண்டறிய முயற்சி செய்து போட்டியில் கலந்து கொண்டனர். இதனால் இரு ஊர்களின் ஆரோக்கியமான போட்டி தான் இந்த வேடிக்கையான மற்றும் உற்சாகமான நிகழ்வின் உணர்வை உருவாக்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here