வடசித்தூர் பகுதியில் வினோதமான முறையில் கழுத்தில் சிலிண்டரை கட்டி தொங்கவிட்டு கொண்டு திமுக தொண்டர் பிரச்சாரம் மேற்கொண்டது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சார களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது, அரசியல் கட்சியின் சார்பில் போட்டுயிடும் வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு தரப்பினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கழுத்தில் சிலிண்டரை கட்டி தொங்கவிட்டு திமுக பிரச்சாரம்

இந்த நிலையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிணத்துக்கடவு ஒன்றியம் வடசித்தூர் ஊராட்சியை சேர்ந்த திமுக கிளை செயலாளரான தம்பிராஜ் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து வினோதமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் தமிழக முதல்வரின் வாக்குறுதி, மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் கேஸ் சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும் என்கிற ஸ்டிக்கரை காலி கேஸ் சிலிண்டரில் ஒட்டி, அதை கழுத்தில் கட்டி தொங்கவிட்டு கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

திமுக பிரச்சாரம்

இவரின் வினோதமான இந்த பிரச்சாரம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் வடசித்தூர் வாரச்சந்தை பகுதிக்கு சென்று சந்தைக்கு பொருட்களை வாங்க வந்திருந்த மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில்;- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பொறுத்தவரை சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்ட கூடியவர் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கியுள்ளார்.

வினோதமான முறை – கழுத்தில் சிலிண்டரை கட்டி தொங்கவிட்டு திமுக பிரச்சாரம்

அப்போது உரிமைத்தொகையாக ரூ.1000 வழங்கி வருகிறார். மேலும் படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1000, மாணவர்களுக்கு காலை உணவை திட்டம், நூறுநாள் வேலை திட்ட ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்கினார்.

இப்படி ஒரு நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே போகலாம். அப்படி சொல்வதை செய்து காட்டும் நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த நாடாளுமன்ற தேர்தலில் சில வாக்குறுதிகளை கூறியிருக்கிறார்.

கழுத்தில் சிலிண்டரை கட்டி தொங்கவிட்டு திமுக பிரச்சாரம்

அது என்னவென்றால் ஏழை தாய்மார்களின் துயரை துடைக்கும் வகையில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும். மேலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல் விலை ரூ.75, டீசல் விலை ரூ.65 ஆக குறைக்கப்படும்.

மேலும் நூறுநாள் வேலை திட்ட ஊதியத்தை ரூ.400 ஆக குறைக்கப்படும் என்பது போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கூறியிருக்கிறார். சட்டமன்ற தேர்தலின் சொன்ன வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றினாரோ, அப்படி இந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார்.

வினோதமான முறை – கழுத்தில் சிலிண்டரை கட்டி தொங்கவிட்டு திமுக பிரச்சாரம்

இதனால் இந்த தேர்தலில் மட்டுமல்ல இனி எந்த தேர்தல் வந்தாலும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். அப்போது வினோதமான இவரின் இந்த பிரச்சாரம் மக்களை வெகுவாக கவர்ந்து என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here