கரூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் கழுத்தில் டார்ச் லைட் அடித்து பார்த்து செல்லும் திருடன் சிசிடிவி காட்சிகளில் வெளியாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம், அடுத்த வாங்கலை அருகே மாரிகவுண்டன்பாளையம் கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் கோடை வெயில் காலம் என்பதால் வீட்டை பூட்டி விட்டு, முன்புறம் உள்ள முட்டத்தில் கட்டில் போட்டு தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

Karur : வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் கழுத்தில் டார்ச் லைட் அடித்த திருடன் – சிசிடிவி காட்சிகள் வைரல்

அப்போது சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே சென்ற அந்த மர்ம நபர் தூங்கும் பெண்களின் கழுத்தில் தங்க நகைகள் இருக்கிறதா என்று டார்ச் லைட் அடித்து பார்த்து சென்றுள்ளான்.

அப்போது வேட்டியை சுருட்டி கட்டிக் கொண்டும், சட்டையை கழட்டி முகம் தெரியாமல் இருக்க துணியை கட்டி கொண்டு அரை நிர்வாணத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் நோட்டமிட்டுச் சென்ற சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Karur : வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் கழுத்தில் டார்ச் லைட் அடித்த திருடன் – சிசிடிவி காட்சிகள் வைரல்

இதன் காரணமாக அப்பகுதி கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படாத நிலையில் இக்காட்சிகளை கொண்டு வாங்கல் போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு நேரத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here