நாட்டில் தமிழகம், மேற்குவங்கம், பீகார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும், மிக மோசமான வெப்ப அளவே நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மே 1 ஆம் தேதி வரை வெப்ப அலை நீடிக்கும்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்;- நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிக மோசமான வெப்ப நிலை நீடிக்கும். மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், ஜார்க்கண்டில் ஒரு சில பகுதிகளில் மே 1 ஆம் தேதி வரை கடுமையான வெப்பம் நிலவக்கூடும் என்றும்,

தமிழ்நாட்டில் மே 1 ஆம் தேதி வரை வெப்ப அலை நீடிக்கும்

அதன்பிறகு, மே 2 ஆம் தேதி வரை ஒரு சில பகுதிகளில் மோசமானது முதல் மிக மோசமான வெப்ப அலை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழகம், புதுசசேரி, உள் கர்நாடகம், கோவா, ராயலசீமா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தெலங்கானாவில் இன்று முதல் மே 1 ஆம் தேதி வரையும், கேரளத்தின் கொங்கன் பகுதிகளில் இன்றும் வெப்ப அலை வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here