கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருவது வழக்கம்.

இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா நேற்று மாரியம்மன் கோயில் அருகில் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

கூவாகம் கூத்தாண்டவர் கோயில்

அதில் கூவாகம் மற்றும் சுற்றியுள்ள வேலூர், நத்தம், தொட்டி, பந்தலடி, சிவிலியாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் கொண்டு வந்த கூழ் குடங்களை வைத்து படையலிட்டனர்.

பின்னர் படையலிடப்பட்ட கூழ் அங்கு இருக்கும் பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்று முதல் மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதி உலாவும் நடைபெற உள்ளது.

திருநங்கைகள்

மேலும் 12 ஆம் தேதி பீஷ்மர் பிறப்பு, 14 ஆம் தேதி பாஞ்சாலி பிறப்பும், 17 ஆம் தேதி கூத்தாண்டவர் பிறப்பு மற்றும் சுவாமி வீதியுலா, 21 ஆம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாலயம் நடைபெறுகிறது. அப்போது 22 ஆம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி

அப்போது முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோயில் பூசாரி கையினால் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை

அதை தொடர்ந்து 24 ஆம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது. மேலும் 25 ஆம் தேதி விடையாத்தியும், 26 ஆம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

பின்னர் ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கூவாகம் கிராம மக்கள் திருநங்கைகள் கூட்டமைப்பினர், மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அந்த பகுதியில் ஆரவாரத்துடன் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here