தற்போது 2,3 நாட்கள் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று மோடி நினைக்கிறார். நான் அவருக்கு சவால் விடுக்கிறேன். 40 நாட்கள் தமிழ்நாட்டில் தங்கி பிரசாரம் செய்தாலும், இங்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனித நேயத்திருவிழா என்ற தலைப்பில் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.

அதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தயாநிதி மாறன் எம்.பி. உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மூத்த முன்னோடிகள் பேருக்கு பொற்கிழியும், 500 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகையும், கட்சி மகளிர் 72 பேருக்கு இருசக்கர வாகனம் ஆகியவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது;-

அப்போது இன்னும் 4 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன். பின்பு கட்சி சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கட்சிக்காக உழைத்த, ரத்தம் சிந்திய முன்னோடிகளை வரவழைத்து கவுரப்படுத்தும் நிகழ்ச்சி தான் எனக்கு மிகவும் பிடித்தது.
அந்த வகையில் ஊக்கத்தொகையாக கட்சி முன்னோடிகளுக்கு 43 மாவட்டங்களில் ரூ.45 கோடி வழங்கப்பட்டு உள்ளது. மகளிர் வீட்டைவிட்டு வெளியே வந்து பணிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கட்டணமில்லா பஸ் திட்டத்தை முதல்வர் வழங்கினார். இதுவரை 454 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளார்கள்.

குழந்தைகள் வெறும் வயிற்றில் பள்ளிக்கு வரக்கூடாது என்ற நோக்கில் காலை சிற்றுண்டித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நம், திட்டத்தை பெற்றோரும். ஆசிரியர்களும் பாராட்டுகிறார்கள். அது மட்டுமல்லாமல், புதுமை பெண் திட்டம் கொண்டு வரப்பட்டது.
அது வெற்றி பெற்றது. தற்போது தமிழ் புதல்வன் திட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கலைஞர் மகளிர் உரிமை தொகைத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டம் மூலம் 1 கோடியே 14 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. தலைவருக்கு பிறந்தநாள் பரிசாக வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று கொடுக்க முடியாது. வேண்டும்.
அதற்காக நாம் உழைக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு ரூ.6 லட்சம் கோடி வழங்கி உள்ளது. நமக்கு ஒன்றரை லட்சம் கோடி தான் திருப்பி தந்திருக்கிறார்கள். அதாவது, ஒரு ரூபாய்க்கு 28 பைசா தான் தருகிறது.

ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒரு ரூபாய்க்கு 100 ரூபாய் வரை தருகிறார்கள் தமிழ்நாட்டை மட்டும் தான் தொடர்ச்சியாக வஞ்சிக்கிறது. அப்போது மழை, புயல் வந்தாலும் பிரதமர் மோடி தமிழ்நாட்டை எட்டிப்பார்க்கமாட்டார்.
ஆனால் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் தான் வருவார். கடந்த 2014-ல் வந்து எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி கட்டப்படும் என்றார் அடிக்கல் நாட்டினார் ஒரே ஒரு செங்கல் இருந்தது. அதையும் நான் தூக்கிட்டு வந்துவிட்டேன்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே தங்கினாலும் ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
இப்போது மதுரைக்கு சென்று எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி வந்து விட்டது என்று சொல்கிறார். இதுவரை அதற்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. மற்ற மாநிலங்களில் 6 எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியை தொடங்கியிருக்கிறார்கள்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டில் 2 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார் திமுகவை அழிக்கப்போகிறேன் என்று சொல்லியுள்ளார். மேலும் 60, 70 ஆண்டுகளாக இதை சொன்னவர்கள் தான் அழிந்து போய் இருக்கிறார்கள் திமுகவை மோடி இல்லை.

பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே தங்கினாலும் ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அவர் தாத்தாவே வந்தாலும் அழிக்க முடியாது. திமுகவை அழிக்க அல்ல. தொட்டுக்கூட பார்க்க முடியாது. இன்னும் 2. 3 நாட்கள் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்று மோடி நினைகிறார்.
நான் அவருக்கு சவால் விடுக்கிறேன். இன்னும் 40 நாட்கள் தமிழ்நாட்டில் தங்கி பிரசாரம் செய்தாலும். இங்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப தெளிவானவர்கள்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே தங்கினாலும் ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பின்னர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயில் சுட்டினீர்கள் தமிழ்நாட்டு மக்கள் அங்கு வந்து சாமி கும்பிடுவார்கள். ஆனால் தேர்தல் நேரத்தில் மக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று உதயசூரியன் சின்னத்தில் தான் வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.