தமிழகத்தை பொறுத்தவரை பாஜக தாமரை கிடையாது – நடிகை விந்தியா..!

2 Min Read

திருவிழா முடிந்ததும் வளர்த்தவரே ஆட்டை பலி கொடுப்பது வழக்கமாக இருப்பது போல் கோவையில் நான் தான் தலைவன் என்று சுற்றிக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டி.

- Advertisement -
Ad imageAd image

தேர்தல் முடிந்தவுடன் மட்டன் பிரியாணி ஆகப்போவது நிச்சயம் என அதிமுக வேட்பாளர் ஆதரித்து கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.

பாஜக

தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக தாமரை கிடையாது. அது கருவேல மரம் என்றும், அது வளர வளர நாம் வெட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், கூறியுள்ள நடிகை விந்தியா பாஜக எவ்வளவு ஆபத்தானதோ அதை விட ஆபத்தானவர் அண்ணாமலை என்றும் விமர்சித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேரன் மாநகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தமிழகத்தை பொறுத்தவரை பாஜக தாமரை கிடையாது – நடிகை விந்தியா

அப்போது பேசிய அவர் கோயம்புத்தூர் மக்கள் தன்மையாக இருப்பார்கள் மென்மையாக பேசுவார்கள் உண்மையாக நடந்து கொள்வார்கள் என்றும், இந்த மக்கள் விருந்திலும் உபசரிப்பிலும் நம்பர் ஒன் அன்புக்கும் பண்புக்கும் பெயர் போனவர்கள் என்றும் கூறினார்.

அப்போது தேர்தல் காலத்தில் எத்தனையோ பேர் எத்தனையோ வேஷம் போட்டு வீரன் போன்று வசனம் பேசி வருகிறார்கள் எனவும், நானும் ரவுடி தான் நானும் ரௌடி தான் என்னும் நடிகர் வடிவேலு போன்று நான் தான் தலைவன் நான் தான் தலைவன் என்று ஒரு ஆட்டுக்குட்டி சத்தம் போட்டு சுத்தி கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை பாஜக தாமரை கிடையாது – நடிகை விந்தியா.

திருவிழா முடிந்ததும் ஆட்டை வளர்த்தவனே பலி கொடுப்பான் என்பது வரலாறு என்றும் அந்த ஆட்டுக்குட்டி இந்த தேர்தல் முடிந்தவுடன் கோயம்புத்தூரில் மட்டன் பிரியாணி ஆகப்போகுது நிச்சயம் என்றும் விமர்சித்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக தாமரை கிடையாது.

அது கருவேல மரம் என்றும், அது வளர வளர நாம் வெட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், பி.ஜே.பி எவ்வளவு ஆபத்தானதோ அதை விட ஆபத்தானவர் அண்ணாமலை என்றும் கூறினார்.

Share This Article
Leave a review