விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வழுதாவூர் பகுதியில் அமைச்சர் பொன்முடி தலைமையில் தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.

அதில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், இது பாசிச சக்திகளுக்கு மக்களின் சக்தி என்ன என்பதை காட்டும் தேர்தல்.

மோடி

மோடி தலைமையிலான பாஜக அரசு மக்களுக்காகவும், அவர்களின் நகலனுக்காகவும் எந்த ஒரு திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. நம்முடைய திராவிட அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் காக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னதை செய்பவராக ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் மக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் சொன்னபடியே நிறைவேற்றி வருகிறார். ஆனால் பிரதமர் மோடி சொன்ன சொல்லை காப்பாற்றாமல் வாயாலே வடை சூடுபவர்.

பாஜக

அப்போது மோடி ஏழை, எளியவர்களிடம் வரி என்கிற பெயரில் வழிப்பறி செய்கிறார். அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமானால் காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

நமது நலனில் அக்கறை கொள்ளாத மோடி ஆட்சியை விட்டு நீக்கிவிட்டால் நமக்கான நலத்திட்டங்கள் தடையின்றி அனைவருக்கும் கிடைக்கும்.

மத்தியில் மோடி இருக்கும் வரை எந்த முன்னேற்றமும் இருக்காது – து. ரவிக்குமார்

மேலும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்றால் அன்றாடம் அதிகம் பயன்படுத்தக்கூடிய பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். அதை தொடர்ந்து மகளிர் மேம்பாட்டிற்காக மகாலட்சுமி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைப்பது போல வருடந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் மகாலட்சுமி திட்டத்தின் கீழ் கிடைக்கும்.

விசிக

மகளிர் வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டத்தினை முன்னெடுக்கும் முதல்வருக்கு நன்றி சொல்லும் விதமாக பெண்கள் கட்டாயம் பானை சின்னத்திற்கு வாக்களிப்பீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

நம்முடைய பிள்ளைகள் கல்வி பெற, படித்தவர்களுக்கு வேலை கிடைக்க, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிட, நமக்கான வாக்குரிமை காக்கப்பட, தமிழர்களுக்கான உரிமைகள் மீட்க பானை சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

திமுக

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மகத்தான வெற்றியை தாருங்கள் என கூறினார்.

அதனை தொடர்ந்து முட்ராம்பட்டு, பிடாரிப்பட்டு, கொடுக்கூர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள சென்ற வேட்பாளருக்கு மக்கள் குலவையிட்டு ஆர்த்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.


மத்தியில் மோடி இருக்கும் வரை எந்த முன்னேற்றமும் இருக்காது – து. ரவிக்குமார்

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் வாசன், ஒன்றிய செயலாளர் ராஜி, விசிக ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செழியன், விசிக மாவட்ட செயலாளர் வீரபொன்னிவளவன், விசிக தொகுதி செயலாளர் பால்வண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here