இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் எடுத்து செல்வதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும் – பல்லடத்தில் மோடி பேச்சு..!

3 Min Read

ஒன்றிய அரசு ஜவுளித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என பல்லடம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் நேற்று நடந்தது.

- Advertisement -
Ad imageAd image

இதில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது;- கொங்கு பகுதியான இது இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் ஜவுளித்தொழிலில் முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் எடுத்து செல்வதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும் – பல்லடத்தில் மோடி பேச்சு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் எடுத்து செல்வதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த முறை தேசத்தை கட்டமைப்பதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும். அப்போது 2024 ஆம் ஆண்டு தமிழகம் அதிகமாக விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அப்போது 2024 ஆம் ஆண்டு அமைய உள்ள ஆட்சியில், தமிழகம் துடிப்பான மாநிலமாக உருவெடுத்துள்ளது.

பிரதமர் மோடி

அண்ணாமலையின் நடைபயணத்திற்கு மக்களிடம் பேராதரவு கிடைத்து இருக்கிறது. என்னை பொறுத்த அளவில் தமிழ் மொழியும், கலாசாரமும் முக்கியமானது. ஐ.நா. சபையில் நான் பேசும் போது தமிழ்க்கவிதையை படித்தேன். அதுபற்றி உலக அளவில் என்னிடம் கேட்கிறார்கள்.

காசியில், காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சி நடத்தினேன். அதைப்பற்றியும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். தமிழகத்துடனான எனது தொடர்பு அரசியல் ரீதியானது அல்ல.அது என்னுடைய இதயத்துடன் தொடர்புடையது.

என் மண் என் மக்கள்’ நடைப்பயண நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவில்லை என்றாலும், பாஜகவின் இதயத்தில் தமிழகம் எப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. ஒன்றியத்தில் இருக்கும் பாஜக அரசு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு எப்போதும் உதவிகரமாக இருந்து வருகிறது.

தற்போது பாஜக அரசு தமிழகத்திற்கு 3 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளது. பாஜக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தின் வளர்ச்சிக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி

மோடியின் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ஏழைக்கு இலவச அரிசி, இலவச கியாஸ் சிலிண்டர், வீடு கட்ட நிதி வழங்கி வருகிறோம். மோடியின் உத்தரவாதம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமல்ல, அனைவருக்குமானது.

தமிழகம் வந்திருக்கும் நான் எம்ஜிஆரை நினைவு கூறுகிறேன். என்னுடைய இலங்கை பயணத்தின் மூலம் அவர் பிறந்த கண்டியை அறியும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது அவர் பணியாற்றிய மண்ணுக்கு வந்துள்ளேன். தரமான கல்வி, சுகாதாரத்தை அவர் கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடி

தமிழக மக்கள் எப்போதும் தேசத்தை உயர்த்தி பிடித்திருக்கிறார்கள். நாட்டில் இரண்டு பாதுகாப்பு வழித்தடம் அமைக்கப்படுகிறது. அதில் ஒன்று தமிழகத்தில் வருகிறது.

ஜவுளித் துறையை மேம்படுத்துவதில் ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதில், தமிழகத்துக்கு அதிக பலன் இருக்கும். ஒன்றிய அரசு ஜவுளித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

பிரதமர் மோடி

இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். விருதுநகரில் பிரதமர் மித்ர ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு உருவாகும். தமிழகத்தில் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது.

பாஜக தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சிக்கு வருவது பற்றியும், வளர்ச்சி அடைந்த பாரதத்தை பற்றியும், 3-வது வளர்ந்த நாடாக உருவாக்குவது பற்றியும் பேசி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Share This Article
Leave a review