கோவையில் இன்று நடைபெற உள்ள பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்:-
தமிழ்நட்டில் கள்ளசாராயத்தால் 69 உயிர்களை இழந்து உள்ள சூழலில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் மூத்த அமைச்சர் சட்டமன்றத்தில் பேசும் போது சரக்கில் கிக் இல்லாததால் தான் மக்கள் கள்ளசாராயம் நோக்கி செல்கின்றார்கள் என்று,
மிக மிக ஒரு மோசமான பதிவை பதிய வைத்ததை தேமுதிக சார்பாக வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். முதலமைச்சர் முன்பு மூத்த அமைச்சர் சட்டமன்றத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் கிக்கு என்கின்றார். சரக்கு பற்றி பேசுகிறார், கிறுக்குத் தனமாக பேசுகிறார் எனவும்,
69 உயிருக்கும் முழு சாட்சி நீங்கள் தான் என்பதை அவரே ஒற்றுக் கொண்டு உள்ளார். என்பதை தான் இங்கு பார்க்க முடிகின்றது என்றும் குற்றம் சாட்டினார். கள்ளசாராயம் வரக்கூடாது என்பதற்காகத் தான்,

தமிழ்நாடு முழுக்க டாஸ்மார்க் கடைகளை நடத்தி ஆண்டு முழுவதும் 45 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து மக்கள் உயிரை பணயம் வைத்து இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழகத்தையும் குடிகாரர்களாக மாற்றிய பெருமை தான் இந்த ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது என்றும்,
ஆனால் மூத்த அமைச்சர் சட்டசபையில் சொல்லி உள்ளார். அவர்களாக திருந்தினாலே தவிர திருத்த முடியாது என்று சொல்கிறார். பிறகு எதற்கு இந்த ஆட்சி எல்லா இடங்களிலும் காவல் நிலையம் வைக்க முடியாது என்று சொல்பவர்களுக்கு எப்படி,
டாஸ்மார்க் மட்டும் வைக்க முடியும், போலீஸ் ஸ்டேஷன் வைக்க முடியாதா என்ற மக்கள் கேள்வியை நான் எழுப்புகிறேன் என்றார். மேலும் கஞ்சாவால் மட்டும் அழிவு கிடையாது.
இங்கே ஹெராயின் போன்ற மிக கொடுமையாக இன்றைக்கு பள்ளி படிக்கின்ற மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அத்தனை பேரும் பாதிக்கின்ற ஒரு நிலைமை இருப்பதாக ஆளுநர் மன வருத்தத்தோடு பதிய வைத்து உள்ளார் எனவும்,

தமிழ்நாடு எதை நோக்கி சென்று கொண்டு உள்ளது என்பதை தமிழக மக்கள் நீங்கள் உணர வேண்டும், எது நல்ல ஆட்சி நமக்கான நல்ல தலைவர் யார் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சியும் எந்தவித செயல்பாடுகள் இல்லாமல் முடங்கி உள்ளதாகவும் கூறினார். மீண்டும் ஒரு மரணம் கள்ளசாராயத்தால் தமிழகத்தில் வரக்கூடாது என்ற நோக்கத்தில் கள்ளசாராயம் காய்ச்சினால்,
ஆயுள் தண்டனை மற்றும் பத்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும், தற்போது கைது செய்யப்பட்டு, உள்ளவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்துமா என்பதை முதல்வர் சொல்ல வேண்டும் என்றும்,
இவ்வளவு ஆண்டுகள் தூங்கி விட்டு இப்போது தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்தது போல இப்போது தான் முதல் முறையாக கள்ளசாராயம் செய்தது போல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். இது உண்மையிலேயே கண்துடைப்பு நாடகம் தான் என்றார்.

கள்ளக்குறிச்சியில் மொத்தமாக ஆளுங்கட்சியின் துணையோடு தான் கள்ளசாராயம் காய்ச்சப்படுகிறது என்றும், இதற்கு முழு பொறுப்பு அமைச்சர் முத்துசாமி தான் என்றும், அவர் பதவி விலகினால் தான் இதை மக்கள் ஏற்றுக்கொள்ள முடியும், இதற்கு முழு பொறுப்பை அரசு தான் ஏற்க வேண்டும்.
இனி ஒரு மரணமும் நிகழக்கூடாது. இது மிகவும் கண்டனத்திற்குரியது என்பதை நான் கூறிக் கொள்கிறேன் என்றார். டாஸ்மாக்கில் அதிக விலைக்கு விற்பதால் அதை வாங்க முடியவில்லை என்று கள்ளச்சாராயம் வாங்க செல்கிறார்கள் என்று அமைச்சரே சொல்கிறார் என்றால் இது ஒரு சான்று போதும்.
இந்த அரசை டிஸ்மிஸ் செய்வதற்கு என்றும் நாம் இழக்க போகின்றோம். தமிழக முழுவதும் கள்ளசாராயம் இருக்கின்றது. இதனை இரும்பு கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே தவிர அரசு ஆட்சியாளர்கள் காவல்துறை மக்கள் என அனைவரும் இணைந்தால் தான் இது சாத்தியமடையும் என குறிப்பிட்டார்.
உண்மையிலேயே அந்த காலத்தில் இருந்து பார்த்தோம் என்றால் கள்ளு என்பது விவசாயத்தையும் ஊக்கிவிக்கிறது. இவர்களுடைய தேவையும் நிறைவேற்றுகிறது. விஷச்சாராயம் டாஸ்மார்க் கடையை விட கள்ளு மிகவும் நல்லது உயிர் கேடு எதுவும் இருக்காது.

மிகவும் உடலுக்கு நல்லது என்ற ஒரு கருத்து உள்ளது நிச்சயம் அரசு தலைமை பரிசீலனை செய்ய வேண்டும். கள்ளு இறக்கி அதை விற்பனை செய்வதால் அரசாங்கத்திற்கு எந்த வித இன்கம் கிடையாது. அதனால் அதை ஊக்குவிக்க மாட்டேன் என்கின்றார்கள்.
இப்போது 45 ஆயிரம் கோடி என்கிறார்கள். அடுத்தது ஐம்பது 55 ஆயிரம் கோடி என்ற இலக்கை நோக்கி உள்ளார்கள். இது தான் இந்த அரசாங்கத்தின் அவல நிலை மக்களின் உயிரை பயணம் வைத்து தான் இந்த அரசு நடக்கிறது.
போன முறை எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அவரும் அவரது மகனும் மதுவை ஒழிப்போம் என்று வீட்டு முன்பு நின்று கூறினார்கள். இப்போது ஏன் மதுவை ஒழிக்கவில்லை. இப்போது யார் ஆட்சி நடந்து கொண்டு உள்ளது. இப்போது ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை.
ஏன் யாரையும் நேரில் சந்திக்கவில்லை. இதற்கு முழு பொறுப்பு ஏற்று முதல்வர் மக்களை சந்திக்க வேண்டும் அல்லவா. கனிமொழி அவர்கள் தமிழகத்தில் தான் அதிக இளம் விதவைகள் இருக்கின்றார்கள் என்று கூறினார். ஆனால் இப்போது ஏன் பயந்து கொண்டு ஓடுகிறார்.

கனிமொழி இந்த ஆட்சியின் அக்கறை என்ன ஆனது. கலைஞர் இருந்த போது முழு மதுவிலக்கு என்று கூறினார் ஸ்டாலின். அவர்களும் இதே வார்த்தையை கூறினார். உதயநிதி வரும் போது இவரது ஆட்சி வந்ததும் முழு மதுவிலக்கு என்று கூறினார். இப்போது மூன்று வருடம் கடந்து 4 ஆண்டுகளை நோக்கி செல்கிறது.
ஸ்டாலின் நாங்கள் ஓடி ஒளியவில்லை. எதையும் மறைக்கவில்லை என்று கூறுகிறார். உண்மையிலேயே ஓடி ஒளியவில்லை என்றால் நீங்கள் கொடுத்த வாக்குறுதிபடி முழு மதுவிலக்கை கொண்டு வந்து கள்ளசாராயம் இனி எங்கும் காய்ச்சப்படவில்லை என்பதை சொல்ல வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.
நீட் தேர்வு வேண்டாம் என்று ஆர்வம் முதலில் சொல்லிக் கொண்டு உள்ளோம். மத்திய அரசு நீட் தேர்வை நாங்கள் எடுக்க முடியாது என்று கூறி வருகின்றனர். அனைத்து மாணவர்களின் கருத்தைக் கேட்டு நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை கேட்டு ஒரு தெளிவான கருத்தை எடுக்க வேண்டும்.
இதை வைத்து அரசியல் தான் செய்து கொண்டு உள்ளனர். எந்த விதமான தீர்வும் கிடைக்கவில்லை. அதனால் ஒரு நிலையான நல்ல முடிவை மாணவர்கள் சார்ந்து எடுக்க வேண்டும். சட்டமன்றம் நடப்பது எதற்காக மக்களின் பிரச்சனையை பேசுவதற்கு தான் மக்களுடன் வழிபாட்டில் தான் அந்த சட்டசபை நடக்கிறது.

அங்கு மக்கள் பிரச்சனையை பேசக்கூடாது. ஏதாவது பேசினால் அவர்களை அவை காவலர்களை வைத்து வெளியில் இழுத்துச் செல்வது எந்த வகையில் நியாயம். ம்இதே திமுக இன்றைக்கு சொல்கிறார்கள். விளம்பரம் தேடுவதற்கு தான் சட்டசபையில் கலந்து கொள்கிறார்கள் என்று,
கடந்த முறை திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது எத்தனை முறை வெளிநடப்பு செய்தது. அவை நடக்கவிடாமல் தடுத்து உள்ளார்கள் உச்சபட்சமாக சபாநாயகர் தனபாலின் இருக்கை சென்று அவர்களும் இன்னொரு எம்.எல்.ஏ வும் உட்கார்ந்து அட்ராசிட்டி செய்தார்கள்.
அதிமுக அதையெல்லாம் செய்யவில்லையே கள்ளசாராயம் விவாகரத்தை பேச வேண்டும் என்று சொல்லி தான் கேட்டார்கள். அதற்கே அனுமதி இல்லை உண்மையிலேயே ஜனநாயகம் படுகொலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. மீண்டும் ஒரு எமர்ஜென்சி ஆட்சி போல தான் நடந்து கொண்டு உள்ளது.
இதுதான் உண்மை நிச்சயம் மக்கள் இதை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இன்றைக்கு பெருமை பேசுகிறார்கள் கூலி சேதாரம் இல்லாமல் 40-க்கு 40 வந்து உள்ளது, அடுத்தது 200-க்கு 200 நாங்கள் தான் விக்கிரவாண்டி தேர்தலில் அடுத்த தேர்தலை நோக்கி தான் இந்த ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.

தவிர அடுத்த தலைமுறையை யோசிக்கின்ற கட்சியாக இன்றைக்கு திமுக இல்லை. அவர்கள் குடும்பத்தை மற்றும் தலைமுறையை பார்லிமென்டில் பதவி கேட்கிறார்கள். அதையே நிலை நிறுத்துகிறார்கள்.
தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிர்காலத்திற்கு என்ன விட்டு செல்கிறார்கள் என்ற கேள்வியை நான் கேட்கிறேன். ஒரு பக்கம் மணல் கொள்ளை, ஒரு பக்கம் கனிம வள கொள்ளை, ஒரு பக்கம் டாஸ்மார்க், ஒரு பக்கம் கள்ளசாராயம், ஒரு பக்கம் கஞ்சா போதை விற்பனை,
எங்கும் வேலை கிடையாது இப்படி சென்று கொண்டு இருந்தால் எப்படி சரியாக வரும்?. இன்றைக்கு துபாய் போன்ற பல நாடுகள் சென்றால் எதற்கு பல முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்து அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்று கூறினார்.
இன்றைக்கு அமெரிக்கா செல்கிறாராம் எதற்கு என்றால் முதலீடுகளை கவர்வதற்கு என்று கூறுகிறார். மக்களுக்காக நான் பேசுகிறேன் விழிப்புணர்வோடு இருங்கள் இனிவரும் காலம் மக்களுக்காக ஒரு நல்ல ஆட்சி மலர நீங்கள் ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும்.

40 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி போன்ற பல்வேறு பணிகளை செய்து வருவது கேப்டன் தான் இன்றைக்கு விஜய் அவர்கள் செய்து வருகிறார்.
அதற்கு எங்களுடைய வாழ்த்துக்கள். இனி வரும் காலங்களில் அவருடைய செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.