கட்சதீவு விவகாரம் : அதிமுக எதிர்ப்பது ஆச்சரியம் – அண்ணாமலை..!

6 Min Read

கட்சதீவு விவகாரத்தை வெளிகொண்டு வந்து இருக்கும் நிலையில் அதை அதிமுக எதிர்ப்பது ஆச்சரியம் அளிக்கின்றது எனவும், இதனால் அவர்களை பங்காளி கட்சி என்கின்றேன் எனவும் இதற்கு மேல் பேச விரும்பவில்லை என பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

இதனால் வெள்ள நிவாரணம் தொடர்பாக வழக்கு தொடுத்து இருப்பது தேர்தலுக்காக எனவும் அவர் தெரிவித்தார். கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கட்சதீவு

பின்னர் செட்டி வீதி, பெரிய கடை வீதி, பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றவாறு அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அவரோடு கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் உடன் இருந்தார்.

அப்போது செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நாளை மற்றும் நாளை மறுநாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர உள்ளார்.

அதிமுக

இதனால் நாளை தேனியில் அமுமுக தலைவர் டிடிவி தினகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து மதுரை பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்கிறார். மேலும் அடுத்த நாள் சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு பெற்று, பின்னர் கேரளா செல்கிறார். பிரதமர் தமிழகம் வருவது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

அண்ணாமலை

உறுதியான தகவல்கள் கிடைத்ததும் நாளை தெரிவிக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உரிய காலத்தில் முன்கூட்டியே கட்சி சின்னத்திற்காக விண்ணப்பம் அளிக்காமல் இருந்ததனால் சின்னம் தற்போது கிடைக்கவில்லை.

இதனால் தொண்டர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். இதனை மறைப்பதற்காக என் மீதும் பாஜக மீதும் குற்றம் சாட்டி வருகிறார். சென்னை வெள்ளத்தால் கட்சிக்கான சின்னத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என சீமான் கூறியுள்ளார்.

பாஜக

அதேநேரத்தில் தான் ஜி.கே வாசன், டிடிவி தினகரன் ஆகியோரும் விண்ணப்பித்து சின்னத்தை பெற்றுள்ளனர் என சுட்டிக்காட்டினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின், சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டாலும் அதனால் எந்த பலனும் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை என விமர்சித்தார்.

முதல்வர் களத்தில் இறங்கி மக்களை சந்திக்கும் போது தான் திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி குறித்து முதல்வர் தெரிந்து கொள்ள முடியும் என கூறினார்.

கட்சதீவு விவகாரம் : அதிமுக எதிர்ப்பது ஆச்சரியம் – அண்ணாமலை

மேலும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் மேற்கொள்வது போல் ரோட்ஷோ எனப்படும் வாகன பேரணியை நடத்தி மக்களை சந்திக்க வேண்டும். தமிழக முதல்வர் ஏன் அதை செய்வதில்லை என கேள்வி எழுப்பினார்.

அப்போது பத்தாண்டு கால பிரதமர் ஆட்சியையும் திமுக அரசின் ஆட்சியும் ஒப்பிட்டு பொதுமக்கள் இந்த தேர்தலில் உரிய தீர்ப்பினை வழங்குவார்கள் என அண்ணாமலை கூறினார். தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைப்படி தான் வருமான வரித்துறை இயங்கும்.

பிரதமர் மோடி

திமுக இந்து மதத்தை ஆதரிப்பதாக தற்போது பொய் வேஷம் போடுகிறது. தேர்தல் சமயத்தில் ஆதரிப்பதும் அதற்கு பிறகு எதிர்ப்பதும் என நடந்து கொள்வது தான் திமுகவின் இயல்பு எனவும் அண்ணாமலை கூறினார்.

கச்சத்தீவு விவகாரத்தை பொருத்தவரை அது குறித்த தகவல்களை ஆர்டிஐ மூலம் பெற்று பாஜக மக்கள் முன்பு வைத்துள்ளது. மக்கள் இப்போது அதைப் பற்றி தெரிந்து கொண்டுள்ளனர். எங்களது ஜனநாய கடமையை நாங்கள் செய்துள்ளோம்.

எடப்பாடி பழனிசாமி

மக்கள் அதற்கு ஆதரவளித்துள்ளனர். தமிழக தேர்தல் களத்தில் ஒருவரை ஒருவர் கொச்சையாக பேசிக் கொள்வதில் வாரிசுகளுக்கு இடையே போட்டி உள்ளது. குறிப்பாக இந்தியாவிலேயே அதிகமாக கொச்சையாக பேசுபவராக உதயநிதி இருக்கிறார்.

அப்போது 29 பைசா மோடி என அவர் மீண்டும் கூறினால், அவரை பீர், டாஸ்மாக், சாராயம், ட்ரக் உதயநிதி என எங்களின் தொண்டர்கள் கூறுவார்கள். மரியாதையை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும் என காட்டமாக அண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணமலை

பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தமிழக பாஜக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வருவது குறித்த கோரிக்கையை வைத்துள்ளோம்.

அவர் அதற்கான அனைத்து சாத்தியங்களையும் ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளார் என கூறினார். கோவையில் திமுகவினர் பணம் வாங்கி விட்டு ஓட்டு போடாதவர்களை தேர்தல் ஆணையத்தின் கேமரா மூலம் கண்காணித்து வருகிறோம் என பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்றும் கூறினார்.

கட்சதீவு விவகாரம்

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பா.சிதம்பரத்தின் கருத்துக்கு பதில் அளித்த அண்ணாமலை, கச்சத்தீவு விவகாரத்தை பொறுப்பில்லாமல் கையாண்ட காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பாக கையாள வேண்டும் என பாஜகவிற்கு அறிவுரை வழங்க எந்த தகுதியும் கிடையாது.

கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி செய்ததை மக்கள் மறக்க மாட்டார்கள் என கூறினார். திமுக அதிமுகவினரின் ஆட்டு பிரியாணி விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பணக்காரராக பிறந்தவர்.

அண்ணாமலை

எந்த உழைப்பும் செய்யாதவர். அதனால் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் எனவும், தனிமனித தாக்குதலில் தான் இன்றைக்கு கோயம்புத்தூரின் அரசியல் சென்று கொண்டிருக்கிறது எனவும் கூறினார்.

மேலும் பேசியவர், பாஜக மகளிர் அணி தலைவி வானதி அவர்களும் தானும் அக்கா, தம்பி எப்படி இயல்பாக இருப்பார்களோ அப்படித்தான் இருப்பதாகவும், எங்களுக்கு நடிக்க தெரியாது எனவும், அதை வைத்து தான் ட்ரோல் செய்து வருகின்றனர் எனவும் கூறினார்.

அண்ணாமலை

கச்சத்தீவு விவகாரத்தை தற்போது பேசி வருவதால் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவு எந்த விதத்திலும் பாதிக்காது. மத்தியில் ஆளும் பாஜகவிற்கும் மாநிலத்தை ஆளும் திமுகவிற்கும் தான் போட்டி என்பதை நீண்ட காலமாக தான் கூறி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக அரசியலுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது என கூறியவர்.

பாஜக

இந்தி போராட்டத்தில் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகள் தற்போது எந்த நிலையில் இருக்கின்றனர் என்பதை திமுக வெள்ளையறிக்கையாக வெளியிட வேண்டும். அப்போது தேர்தலுக்குப் பிறகு பாஜக அந்த ஆவணங்களை கட்டாயம் வெளியிடும்.

அவர்களின் பெயரை பயன்படுத்தி திமுக தான் அரசியல் செய்து வருகிறது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து பெரியார் கடுமையாக விமர்சித்துள்ளார். அதை திமுகவினர் ஏற்றுக்கொள்வாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

அதிமுக

உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக வேட்பாளர்கள் ஹிந்தியில் போஸ்டர் அடித்தும், ஹிந்தியில் பிரச்சாரமும் செய்துள்ளனர். திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது எனவும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Share This Article
Leave a review