தமிழ்நாட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிவு .
நியூட்ரினோத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவில்லை- வைகோ தரப்பு வாதம் .
நியூட்ரினோ திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும்- மத்திய அரசு

நியூட்ரினோ திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விளக்கமான அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
ம.தி.மு.க. தலைவர் வைகோ நியூட்ரினோ மைய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என 2015-ம் ஆண்டில் மதுரை அமர்வில் வைகோ தாக்கல் செய்த மனு:
நியூட்ரினோ திட்டத்துக்காக தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தால் தேனி பகுதியில் நில வளம் அழியும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பசுமைத் தொடர்களுக்கு பேரழிவு ஏற்படும். விவசாயம், தண்ணீர், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். மனித உயிர்களுக்கு ஆபத்து நேரிடும்.

ஆய்வு மையம் அமைய உள்ள பகுதியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் முல்லை பெரியாறு அணையும், 60 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் இடுக்கி அணையும் அமைந்து உள்ளன. மக்களை பாதிக்கச் செய்யும் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு எப்போதும் தமிழகத்தை தேர்வு செய்கிறது. எனவே, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, வைகோ தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி:
நியூட்ரினோத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவில்லை என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள்: நியூட்ரினோ திட்டத்தின் ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பினர். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்: நியூட்ரினோ திட்டம் தொடர்பாக விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என கால அவகாசம் கோரினார்
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்