சென்னை நீலாங்கரையில் வசிக்கும் எழில் விஜய்,அபிநயா தம்பதியர்களின் 8 வயது மகன் பிரின்ஸ்டன். மாற்றத்திறனாளியான சிறுவன் சிறு வயதிலிந்தே நீச்சலில் அதிகம் ஆர்வம் ஆர்வம் கொண்டவர் பிரின்ஸ்டன். இதனால் அவருடைய பெற்றோர் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுத்தினர். அது அவர்களது மகன் மாற்றுதிறனாளி சிறுவனுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
சிறுவனின் கடும் முயற்சி மற்றும் அவரது பயிற்சியாளரின் ஊக்குவிப்பால் சிறுவன் தண்ணீரில் மிதக்கும் பயிற்சியை மேற்கொண்டார். முதலில் 5 நிமிடம்,10 நிமிடம் தண்ணீரில் மிதக்கும் பயிற்சியோடு 1 மணி நேரம் தொடர்ந்து மிதக்க பயிற்சி எடுத்தார். இதுவரை 32 நிமிடம் தண்ணீரில் மிதந்ததே சாதனையாக இருந்த நிலையில் தொடர்ந்து ஒரு மணி நேரமாக மிதந்து சாதனை நிகழ்த்தினார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.