மலேசியாவில் இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள லுமித் நகரத்தின் வின் பெர்க் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைப்பதாக உள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேசிய நாட்டின் கடற்படை தினத்தின் 90 ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடைபெற்ற ஒத்திகையின் போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.