உயிரிழந்த பெண்

விழுப்புரத்தில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் இளம் கர்பினி பெண் பலி மருத்துவ நிர்வாகத்தை கண்டித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரே உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரப்பரப்பு.போலீசார் இறந்தவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் கலைந்து சென்றனர்.

சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கம்பந்தூர் கிராமத்தை சேர்ந்த அஜித் குமார் என்பவரின் மனைவி திவ்யா (26). இவர் தனது முதல் பிரசவத்திற்காக கட்ந்த இரண்டு நாட்களுக்கு முன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.திவ்யாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்ததுள்ளது’ இதனை அடுத்து அவருக்கு தொடர்ந்து அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் திவ்யா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவர்களிடன் கேட்ட போது கர்ப்பபை நீக்கப்பட்டதால் ரத்த போக்கு ஏற்பபட்டதால் பெண் உயிரழந்ததாக கூறியுள்ளனர்.

உறவினர்களுக்கு கூட தெரியாமல் பெண்ணின் கர்பப்பையை மருத்துவர்கள் நீக்கியுள்ளதாகவும், திண்டிவனம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் கவனக்குறைவு மற்றும் அலட்சியம் காரணமாக தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் தான் இளம் பெண் உயிர் இழந்ததாக குற்றம் சாட்டி உறவினர்கள்.ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டனர் மருத்துவர்கள் அளித்த விளக்கங்கள் திருப்தி அளிக்கவில்லை, இதனால் மருத்துவ நிர்வாகத்தை கண்டித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரே உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரப்பரப்பு.இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.மருத்துவர்களிடம் விசாரணை மேற்க்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதையெடுத்து மறியலை விடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

உயிரிழந்த பெண்

இருப்பினும் உரிய நீதி கிடைக்காமல் உடலை வாங்க போவதில்லை என உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இறந்த பெண்ணின் கணவர் அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.அவசர கதியில் உறவினர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் இப்படி மருத்துவ சிகிச்சை அளித்ததால் தான் இந்த உயிரிழப்பு நடந்ததாக உறவினர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here