விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – இன்று மாலை முடிகிறது பி …

2 Min Read

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

- Advertisement -
Ad imageAd image

இதை அடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பியது. அதை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

இதை அடுத்து கடந்த மாதம் 14 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. கடந்த 24 ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட 64 வேட்புமனுக்களில் 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த ஜூன் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அப்போது 29 வேட்பாளர்கள் களத்தில் இருப்பினும், இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சியினரிடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. தீவிர பிரச்சாரம் நடைபெற்று வந்த நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் , மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ

தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 8 ஆம் தேதி மாலை 6 மணிக்குமேல் தொகுதிக்குள் இருக்கக்கூடாது.

அவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ அறிவுறுத்தியுள்ளார். அப்போது மாவட்ட தேர்தல் அலுவலர் சுற்றறிக்கையில்;- விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் 10.07.2024 நடைபெறவுள்ளது.

தேர்தல் ஆணையம்

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி 08.07.2024 அன்று மாலை 06.00 மணியுடன் தேர்தல் வாக்கு சேகரிப்பு, பிரச்சாரம் நிறைவடைவதால், அன்று மாலை 06.00 மணிக்குமேல் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எவரும் வாக்கு சேகரிப்பு மற்றும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்றும்,

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், தனியார் வீடுகளில் தங்கி பிரச்சாரம் மேற்கொண்ட வெளி நபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் எவருக்கும் தேர்தல் நடத்தை விதிகளின்படி தொகுதியில் தங்கிட அனுமதி இல்லை.

மீறி தங்கும் பட்சத்தில் தேர்தல் ஆணைய விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

Share This Article
Leave a review