7 1/2-யில் இருந்து தம்பித்து 3 1/2 மணிக்கு அமைச்சர் பதவியேற்கும் பொன்முடி..!

5 Min Read
7 1/2-யில் இருந்து தம்பித்து 3 1/2 மணிக்கு அமைச்சர் பதவியேற்கும் பொன்முடி

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு, பதவி பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவிக்கு ஒரு நாள் உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்க வருமாறு பொன்முடிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. தமது செயலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டதாக அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

7 1/2-யில் இருந்து தம்பித்து 3 1/2 மணிக்கு அமைச்சர் பதவியேற்கும் பொன்முடி

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநர் உச்ச நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம் என கடும் கண்டனம் தெரிவித்துள்ள தலைமை நீதிபதி அமர்வு, இதுதொடர்பாக முடிவு எடுக்க ஆளுநருக்கு 24 மணி நேரம் கெடு கொடுத்துருந்தது.

பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, கடந்த 2006-11 காலகட்டத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்து விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அமைச்சராக பதவி வகித்த பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து கடந்த டிச.19-ம் தேதி தீர்ப்பளித்தது. இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும், பொன்முடியை குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.

இதை அடுத்து, எம்எல்ஏவாக பொன்முடி தொடர்ந்து நீடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி, அதற்கான பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார். ஆனால், ஆளுநர் அந்த பரிந்துரையை நிராகரித்திருந்தார்.

7 1/2-யில் இருந்து தம்பித்து 3 1/2 மணிக்கு அமைச்சர் பதவியேற்கும் பொன்முடி

இதை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

பொன்முடிக்கு தண்டனை விதித்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுக்கும் ஆளுநரின் செயல் நீதிமன்ற அவமதிப்பாகும். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி ஆளுநர் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

7 1/2-யில் இருந்து தம்பித்து 3 1/2 மணிக்கு அமைச்சர் பதவியேற்கும் பொன்முடி

அப்போது பதவிப் பிரமாணம் செய்து வைப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அவர் கூறுவது வினோதமாக இருக்கிறது. அவருக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்.

ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது மட்டுமின்றி,எங்களுக்கும் கவலை அளிக்கிறது. ஆனால், அதை இந்த நீதிமன்றத்தில் நாங்கள் சத்தம் போட்டு கூற விரும்பவில்லை.

7 1/2-யில் இருந்து தம்பித்து 3 1/2 மணிக்கு அமைச்சர் பதவியேற்கும் பொன்முடி

ஆளுநருக்கு ஆலோசனை வழங்கியவர்கள் சரியான ஆலோசனையை வழங்கவில்லை. உச்சநீதிமன்றம் ஒரு தண்டனையை நிறுத்தி வைக்கும் போது, அது ஒரு தண்டனையை தடுக்கிறது என்பது ஆளுநருக்கு தெரியாதா.

மனுதாரருக்கு மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததன் மூலம், உச்சநீதிமன்றத்தை அவர் அவமதித்துள்ளார். அரசியல் சாசனத்தை ஆளுநர் முறையாக பின்பற்றாவிட்டால், மாநில அரசு என்ன செய்யும்.

பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

ஜனநாயக முறைப்படி மனுதாரருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு முதல்வர் பரிந்துரை செய்துள்ளார். அதை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும். முதல்வரின் தனிப்பட்ட அதிகாரத்தில் ஆளுநர் எப்படி தலையிட முடியும். அவருக்கு சட்டம் தெரியுமா, தெரியாதா.

அவருக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தகுந்த அறிவுரை கூற வேண்டும். இல்லாவிட்டால், கடுமையான கருத்துகளை பதிவு செய்ய நேரிடும். குறிப்பாக உச்சநீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம்.

பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணி: இந்த வழக்கை 22-ம் தேதிக்கு (இன்று) தள்ளி வைக்க வேண்டும். இதுதொடர்பாக விளக்கம் கேட்டு தெரிவிக்கிறேன்.

தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை எதிர்த்து ஒவ்வொரு முறையும் நாங்கள் இவ்வாறு நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டுமா? குற்ற வழக்குகளில் நீதிமன்றம் தண்டனை விதித்து பிறப்பிக்கும் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டால் இழந்த பதவி தானாக வந்துவிடும் தானே.

7 1/2-யில் இருந்து தம்பித்து 3 1/2 மணிக்கு அமைச்சர் பதவியேற்கும் பொன்முடி

பொன்முடி விவகாரத்தில் ஆளுநர்தான் தவறு இழைத்துள்ளார். இவ்வாறு வாதம் நடந்தது. இதை அடுத்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் ஆளுநர் தனது முடிவை 24 மணி நேரத்துக்குள் எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால், எங்களது நடவடிக்கை என்ன என்பதை இப்போது நாங்கள் கூறப்போவது இல்லை’’ என்று கெடு விதித்து விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளனர்.

7 1/2-யில் இருந்து தம்பித்து 3 1/2 மணிக்கு அமைச்சர் பதவியேற்கும் பொன்முடி

முதல்வர் ஸ்டாலின் தனது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்காக இன்று மாலை திருச்சி செல்கிறார். எனவே அதற்கு முன்னதாக முதல்வர் முன்னிலையில் பொன்முடி அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share This Article
Leave a review