விழுப்புரத்தில் பிசியோதெரபி செய்ய வந்த கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடக்கும் பிசியோதெரபி மருத்துவர். தொடர்ந்து அத்துமீறியதால் குடும்பத்துடன் விலாசி எடுத்த கல்லூரி மாணவியின் குடும்பத்தினர்.
சிகிச்சை பெற்று வரும் பசியோதேரபி மருத்துவரை கைது செய்ய எதிர்பார்த்துக் காத்திருக்கும் விழுப்புரம் நகர போலீசார்.

விழுப்புரம் அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர் விழுப்புரத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் இந்த மாணவி வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்ததால் இடுப்பில் வலி ஏற்பட்டுள்ளது .
இதற்காக விழுப்புரம் ரங்கநாதன் தெருவில் இயங்கி வரும் DS.ஆர்த்தோ கேர் சென்டர் என்ற எலும்பு முறிவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார் அந்த கல்லூரி மாணவி.

அங்கு பிசியோதெரபி மருத்துவரான சந்தோஷ் குமார், கல்லூரி மாணவிக்கு மருத்துவம் பார்த்து உள்ளார். கடந்த 4 நாட்களுக்கு மேலாக நாள்தோறும் வந்து சிகிச்சை பெற்று சென்ற நிலையில் நேற்று இரவு வந்த கல்லூரி மாணவியிடம் மிகவும் தவறான முறையில் தொடக்கூடாத இடத்தில் எல்லாம் தொட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அந்த கல்லூரி மாணவி மருத்துவரை கன்னத்தில் அறைந்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். மாணவியின் சித்தி மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று அந்த மருத்துவரை அடித்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் கொண்டு சென்று உள்ளனர்.
மாணவியின் குடும்பத்தினர் தாக்கியதில் காயமடைந்த மருத்துவர் சந்தோஷ்குமாரை காவல்துறையினர் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியிடம் புகார் மனு பெற்றுக்கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் சந்தோஷ் குமார் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக விழுப்புரம் மேற்கு காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.