அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு..!

2 Min Read
அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு இன்று வழக்கு விசாரணை. இதுவரை 9 பேர் பிறர் சாட்சியாக மாறி உள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

தமிழகத்தில் கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடந்தது. அப்போது திமுக ஆட்சியில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி அவர்கள் தான் கூடுதலாக கனிம வளத்துறையையும் கவனித்து வந்தார். பொன்முடி கனிம வளத்துறையில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் கூடுதலாக அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

செம்மண்வாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் எடுத்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கல்வித்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தவர் க. பொன்முடி அப்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பூந்துறை கிராமத்தில் ஐந்து செம்மண் குவாரிகளை பொன்முடியின் மகன் பொன். கௌதமசிகாமணி மற்றும் உறவினர்கள் ஆகியோர் சிலர் குத்தகைக்கு எடுத்திருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்

அதில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததால் அரசுக்கு 28.36 கோடி இழுப்பிடு ஏற்பட்டுள்ளதாகவும் அரசு அலுவலர்களை பணி செய்து விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக உயர் கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி, அவரது மகன், பொன்.கௌதமசிகாமணி எம்.பி., உள்ளிட்ட 8 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லோகநாதன் இறந்து விட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக 67 பேர் சேர்க்கப்பட்டு, செப்டம்பர் 7-ஆம் தேதி வரை 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் 9 பேர் பிறர் சாட்சி அளித்தனர்.

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம்

இந்நிலையில் இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் பிறர் சாட்சியாக மாறி வருவதால், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் தன்னையும் அனுமதிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி மனுதாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையை அடுத்து அக்டோபர் 3-ஆம் தேதி அவரது மனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் இன்று வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

Share This Article
Leave a review