மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரம் – முதல்வர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் – கிருஷ்ணசாமி கோரிக்கை..!

2 Min Read

தமிழகத்தில் நீலகரி, நெல்லை, திண்டுக்கல் உட்பட 5 மாவட்டங்களில் தேயிலை தோட்டங்கள், காபி தோட்டங்கள் உருவாக்கப்பட்டு, 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையில் இருக்கின்றனர். நெல்லை களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கபட்டவை.

- Advertisement -
Ad imageAd image

இவை 99 வருட குத்தகைக்காக பிபிடிசி என்ற நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாயமாக கையெழெத்து வாங்கி வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இன்றுடன் வேலையை நிறுத்தி விட்டனர்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள்

45 நாட்களுக்குள் இருப்பிடத்தை காலி செய்ய வலியுறுத்துகின்றனர். 8700 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு சொந்தமான நிலம். இந்த நிர்வாகததிற்கான ஒப்பந்தம் முடிவடைகின்றதே தவிர இதை காரணம் காட்டி வெளியேற்றுவது எனபது சரியல்ல. 20 முதல் 30 வருடம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ஒரு லட்சம் தருவதாக கூறி,

இப்போது 25 சதவீதம் மட்டுமே முதலில் கொடுப்பதாக சொல்லி மோசடி செய்து இருக்கின்றனர். தமிழகத்தை சார்ந்த இலங்கை மலையகத்தமிழர்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு வேலை வாய்ப்பிற்காக தேயிலை தோட்டங்கள் ஏற்படுத்தபட்டது. கடந்த 4,5 தலைமுறையாக இருப்பவர்களை வெளியேற சொல்வது என்பது சரியல்ல.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

முதல்வர் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு தொழிலாளர் வாழ்வை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குத்தகை முடிந்தால் அதை டேன்டீ நிர்வாகம் எடுத்து நடத்த வேண்டும். சட்டமன்றத்தில் இது குறித்து கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை கொடுக்க வேண்டும்.

கிருஷ்ணசாமி

இது தொடர்பாக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் கொடுத்துள்ளேன். அதில் அரசியல் பாராது அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் 8700 அந்த நிலத்தை hdfc வங்கியில் அடகு வைத்து கடன் வாங்கி இருக்கின்றனர்.

அதில் பல அத்துமீறல்கள் நடந்து இருக்கின்றது. வேறு ஏதோ தவறான செயலில் ஈடுபட சதி இருப்பதாகவே கருதுகின்றேன்.

Share This Article
Leave a review