நீட் தேர்வை ரத்து செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்த திமுகவை மாணவர்களும், பெற்றோர்களும் மன்னிக்க மாட்டார்கள்.

தங்கம் விலை 6 மாதத்தில் சவரன் 1 லட்சம் என உயர்ந்து விடும். வாக்குகளுக்காக சொற்பமாக குறைக்கப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை தேர்தலுக்கு பிறகு இரண்டு மடங்காக உயர்த்தப்படும் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி.

நாடாளுமன்ற தேர்தல்

திருவள்ளூர் மாவட்டம், அடுத்த பொன்னேரி அருகே ஆரணியில் அதிமுக கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர்;-  நாள்தோறும் கொலைகள், பாலியல் வன்கொடுமை, லாக்கப், மரணம் போன்ற சம்பவங்கள் திமுக ஆட்சியில் நடைபெற்று வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என சாடினார்.

புரட்சி பாரதம் கட்சி

இந்த களேபரத்திற்கெல்லாம் காரணமாக ஆறாக ஓடும் மது மற்றும் கஞ்சா என்றார். கஞ்சா வியபாரிகள் யார் என பார்த்தால் திமுகவினர் குத்தகைதாரர்களாக இருப்பதாகவும், மத்திய உளவுத்துறை அவரை கைது செய்து திகார் சிறையில் அடைந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

இதனால் கஞ்சா அரக்கனை ஒழிப்பதாக மேலோட்டமாக கூறும் அரசு தான் உருவாக்கி கொண்டிருப்பது வேதனையாக இருப்பதாக கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவை காப்போம் என கூறி வருவதாகவும், அவர் எப்படி வெற்றி பெறுவார் எனவும், ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டதாக கூறினார்.

தங்கம் விலை 6 மாதத்தில் சவரன் 1 லட்சம் என உயர்ந்து விடும் – ஜெகன் மூர்த்தி

அப்போது எதிர்க்கட்சிகளுக்கு எழுச்சியோடு வரவேற்பை பார்த்து திமுக கூட்டணி பயந்து எங்களுக்கு வாக்களியுங்கள் என கேட்பதற்கு பதிலாக இந்தியாவை காப்போம் என பேசி வருவதாக கூறினார்.

ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த திட்டங்கள் அனைத்தும் மீண்டும் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தை போல தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாகவும், 6 மாதத்தில் சவரன் 1 லட்ச ரூபாய் வந்துவிடும்.

திமுக

ஏழைகள் தங்கத்தை வாங்க முடியாத நிலை உள்ளதாகவும், குழந்தைகளுக்கு தங்கம் என பெயர் மட்டுமே வைத்து கொள்ள முடியும் எனவும் இதற்கெல்லாம் யார் காரணம் எனவும் மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாக சாடினார்.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை ஏறிக்கொண்டே இருப்பதாகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என எண்ணி மத்திய அரசு சொற்ப அளவே குறைத்திருப்பதாகவும், தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் இரண்டு மடங்கு விலை உயர்த்தப்படும்.

தங்கம் விலை 6 மாதத்தில் சவரன் 1 லட்சம் என உயர்ந்து விடும் – ஜெகன் மூர்த்தி

மத்திய அரசும், மாநில அரசும் இரட்டை வேடம் போட்டு நாட்டை சீரழைப்பதாக சாடினார். நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதியை அளித்த திமுகவை மாணவர்களும், பெற்றோர்களும் மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.

கடந்த 3 வருடமாகியும் என்ன சூட்சமம் உள்ளது என கூறவில்லை என தெரிவித்தார். கச்சத்தீவை காங்கிரஸ், திமுக தாரைவார்த்து கொடுத்த நிலையில், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக அரசு என்ன செய்தது என கேள்வி எழுப்பினார்.

பாஜக

கச்சத்தீவை மீண்டும் கைப்பற்றி தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பதாக பாஜக ஏன் வாக்குறுதி அளிக்கவில்லை எனவும் இருவேறு முகம் காட்டுவதாக சாடினார்.

கிராம மக்கள் பயன்படும் வகையில் இருந்த அம்மா கிளினிக், அம்மா உணவகம், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி போன்ற திட்டங்கள் மீண்டும் செயல் படுத்தப்படும் என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

அனைவருக்கும் 1000 ருபாய் என கூறிய நிலையில் 40% மக்களுக்கு மட்டுமே மகளிர் உரிமை தொகை கிடைப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளாக எம்பியாக இருந்த ஜெயக்குமாரை தொகுதியில் பார்க்கவில்லை.

அந்த கட்சி வேட்பாளரை புறந்தள்ளி அதிமுக கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here