தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

1 Min Read

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

அத்துடன் மே 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 15, 16, 17, 18, 19 ஆகிய 5 நாட்களுக்கு விருதுநகர், தென்காசி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை,

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, திருச்சி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம்

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a review