இந்தியாவில் ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதாவும், மற்றும் அவரது சகோதரர் சத்யநாராயணா ஆகியோர் ஜனவரி 21 ஆம் தேதி அயோத்தி செல்ல இருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராமர் பிறந்த இடமான அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவர் 22-ல் நடைபெற உள்ளது இதில் நடிகர் ரஜினிகாந்த் உற்பட இந்தியாவிலுள்ள 10000 விஐபிக்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான பலத்த ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. தற்போது பகவான் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளி பண்டிகையாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அரசியல் பிரமுகர்கள்

அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும்” என்று பிரதமர் மோடி கோரிக்கையாக கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையில் இருந்து ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள் மற்றும், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் அயோத்தி – ஶ்ரீராம ஜென்மபூமி அரக்கட்டளை தீர்த்த க்‌ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, கும்பாபிஷேக நிகழ்வுக்கு குடும்பத்துடன் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஆர்.எஸ்.எஸ் தென்னிந்திய அமைப்பாளர் செந்தில்குமார் மற்றும், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர் வருகை தந்து அழைப்பிதழ் வழங்கினர். பின்னர் அழைப்பிதழை பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த், உறுதியாக குடும்பத்துடன் வருவதாகவும், இந்த ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் கலந்து கொள்வதை எனது பேரும் பாக்கியம் என கருதுவதாகவும் கூறப்பட்டது.

ரஜினி அவரது மனைவி மற்றும் பிரதமர்

இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் 21 ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து தனது மனைவி லதா மற்றும், அவரது சகோதரருடன் சத்யநாராயணா ஆகியோர் குடும்பமாக செல்ல விருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 22 ஆம் தேதி முழுவதுமாக அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கும் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், மறுநாள் 23 ஆம் தேதி அவர் குடும்பத்துடன் சென்னை புறப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here