தி.மு.க.வை விமர்சனம் செய்து ஊழல் பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை தற்போது ஏன் அமைதியாக உள்ளார்? – எம்.பி. சி.வி.சண்முகம் கேள்வி..!

2 Min Read

தி.மு.க.வை விமர்சனம் செய்த ஊழல் பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை தற்போது ஏன் அமைதியாக உள்ளார் என்று சி.வி சண்முகம் எம்.பி கேள்வி எழுப்பி உள்ளார். விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை தடுக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்து கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் சிறுவந்தாட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சி.வி சண்முகம் எம்.பி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

- Advertisement -
Ad imageAd image

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தண்ணீருக்கும், பாலுக்கும் அள்ளாடும் சூழல் உள்ளது. மழை ஓய்ந்து 8 நாட்களுக்குப் பிறகும் மழை நீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முதுகெலும்பில்லாத நிர்வாக திறமையற்ற ஒரு முதலமைச்சரும், அமைச்சர்களும் உள்ளனர். தி.மு.கவும், பா.ஜ.கவும் தற்போது கள்ள உறவில் உள்ளனர். தி.மு.கவை கடுமையாக விமர்சனம் செய்து ஊழல் பட்டியல்களை வெளியிட்ட அண்ணாமலை தற்போது அமைதியாக உள்ளார். மழை வெள்ளத்தில் தி.மு.க சிறப்பாக செயல்பட்டதாக அண்ணாமலை கூறுகிறார். தமிழகத்தில் ஆய்வுக்கு வந்த மத்திய குழுவினரும், தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதாக கூறுகின்றனர்.

அண்ணாமலை

இன்றைக்கு மத்தியில் ஆலும் பாரதிய ஜனதா அரசு தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிறது. ஆனால் சென்னையில் ஒரு லிட்டர் பால் 200, தண்ணீர் கேன் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க படகுக்கு ரூ.2000 வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கார் ரேஸ் நடத்தினால் தி.மு.க 100 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது. மக்களின் கோபம் தி.மு.க மீது திரும்பி உள்ள காரணத்தினால் ரூபாய் 6000 நிவாரணத்தை அறிவித்துள்ளனர். இதையெல்லாம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும்.

எம்.பி. சி.வி.சண்முகம்

மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் பிரதமர் தமிழ் என பேசுகிறார். மற்றொருபுறம் தமிழுக்கு எதிரான அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள். 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் கேஸ் சிலிண்டர் கடந்த 9 ஆண்டுகளில் ரூபாய் 1200 ஆக உயர்ந்திருக்கிறது. தேர்தல் வருவதால் தற்போது 200 ரூபாய் குறைத்திருக்கிறார்கள். தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ரூபாய் 2000-க்கு உயர்ந்து விடும். 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்ற தி.மு.க தமிழக மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசியதும் இல்லை, போராடியதும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a review