Vikravandi : வாக்கு சாவடி மையத்தில் பெண்ணிற்கு கத்தி குத்து – முன்னாள் கணவருக்கு வலை..!

2 Min Read

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடியில் பெண்ணிற்கு கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வான புகழேந்தி கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதை அடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. கடந்த 24 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட 64 வேட்பு மனுக்களில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

தகுதியான மனுக்களில் யாரும் வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்களுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜூன் 26 ஆம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்த நிலையில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

இந்த தொகுதியில் 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 29 பேர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் பாதுக்காப்புக்காக வடக்கு மண்டல ஐ.ஜி-யான நரேந்திர நாயர் மேற்பார்வையில் டி.ஐ.ஜி-யான திஷா மிட்டல் தலைமையில் 3 எஸ்பி-க்கள், 900 சிறப்புக்காவல்படை போலீசார், 220 துணை ராணுவத்தினர் உட்பட 3,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசார் பாதுகாப்பு பணி

இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் T.கொசப்பாளையம் வாக்குப்பதிவு மையத்தில் வரிசையில் காத்திருந்த கனிமொழி என்ற பெண்ணிற்கு கத்தியால் குத்தி விட்டு,

தப்ப முயன்ற பெண்ணின் முன்னாள் கணவர் ஏழுமலையை மடக்கிப் பிடித்த போலீசார் ஏழுமலை ஏற்கனவே இரட்டை கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர் என தெரிவித்தனர். வாக்கு சாவடியில் பெண் ஒருவருக்கு கத்தி குத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Share This Article
Leave a review