மயிலம், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா 12 ஆண்டுகளுக்கு பின் இன்று நடக்கிறது. வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
விழுப்புரம் மாவட்டம், அடுத்த திண்டிவனம் அருகே உள்ள மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பால சித்தர், ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை முருகப்பெருமான் ஆகிய கோவில்களின் திரு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவானது.

அப்போது கடந்த 2012 ஆம் ஆண்டு திரு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. அப்போது கடந்த 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவனது கடந்த 15 ஆம் தேதி ஸ்ரீ விநாயகர், பால சித்தர், ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனுறை முருகப்பெருமான் வழிபாடு இறை அனுமதி பெறுதல் மகா கணபதி வேள்வி, திருமகள் வேள்வியுடன் துவங்கியது.

அதனை தொடர்ந்து 6 கால யாக சாலை வேள்வி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. தற்போது இன்று 6-வது கால யாக சாலையை தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் கயிலாய வாத்தியங்கள் முழங்க கோபுர உச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து புனித நீரானது கோவில் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது.
இதனால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்பு பக்தர்கள் அரோகரா, கந்தனுக்கு அரோகரா, மயிலம் முருகனுக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பினர். இதனால் கோவில் முழுக்க கோலாகலமாக நடைபெற்றது.

மயிலத்தில் நடைபெறும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விழுப்புரம், புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி, சென்னை உள்ளிட்ட கலந்து கொள்வார்கள் என்பதால் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்களின் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தவும் 500க்கும் மேற்பட்ட போலீசார் கோவில் வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.