விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தமிழக அரசின் மெத்தன போக்கால் தடுப்பணை கட்டப்படாமல் வீணாகும் தண்ணீர் விவசாயிகள் வேதனை.
தமிழகத்தின் வட மாவட்டங்களின் ஜீவ நதியாகப் போற்றப்படுவது தென்பெண்ணை ஆறு.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் என்ற இடத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 73 ஆண்டுகளுக்கு முன்பு எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது. இது 70 ஆண்டுகள் பழமையான தடுப்பணையாகும். இந்த அணைக்கட்டின் மூலம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 20,500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
விழுப்புரம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 50 கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பலவீனமடைந்த கதவனைகள் முழுவதும் வெள்ளத்தில் உடைந்து சேதம் ஆனது. அதனை தொடர்ந்து தண்ணீர் ஊருக்குள் போகாமல் இருக்க அணையின் பக்க சுவர்கள் வெடிவைத்து தகர்த்தப்பட்டன.

தமிழக அரசு பொறுப்பேற்றவுடன் 50 கோடி ரூபாய் செலவில் இந்த அணை சீரமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அந்த தொகை போதாது எனக் கூறி, இதுவரை இந்த தடுப்பணை கட்டப்படாமலே தண்ணீர் வீணாக்கி போய் வருகிறது. அரசின் மெத்தனப்போக்கு தான் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் போனது என்கிறார்கள், அந்த பகுதி விவசாயிகள்.
அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தளவானூர் தடுப்பணை கட்டி முடிக்கப்பட்ட ஒரு மாதத்தில் உடைந்து போனது என அப்பகுதியில் அதிச்சியை ஏற்படுத்தியது.அதற்காக போராட்டம் நடத்திய திமுக ஆளும் கட்சியாக தொடர்ந்த உடன் உடைந்து போன தடுப்பணையை கட்டுவதில் கவனம் செலுத்தவில்லை என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.

தற்போது சாத்தனூரில் திறந்து விடப்படும் தண்ணீர் இரண்டு அணைகள் கட்டப்படாமல் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வீணாகி வரும் தண்ணிரை வெளியேறி வருவதை பொறுக்க முடியாமல் மக்கள் குமுறுகிறார்கள். விவசாயத்திற்கும், பொது மக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன்பட வேண்டிய தண்ணீர் வீணாகக் கடலில் போய் கலப்பதாக அப்பகுதி பொது மக்களும், விவசாயிகளும் குற்றம் சாட்டுகின்றனர்.மணல் மூட்டைகளை அடுக்கியாவது விணாகி வரும் தண்ணீரை தடுக்க வேண்டும்.அப்பகுதி விவசாயத்திற்கும், பொதுமக்களுக்கு தண்ணிர் பயன்பட வேண்டும், என்பது விவசாயிகளின் கோரிக்கை.