மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு – ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள்..!

2 Min Read

18-வது மக்களவைத் தேர்தலின் கடைசி கட்டமான 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) தொடங்கி நடைபெற்று வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மேலும், ஒடிசா மாநில சட்டப்பேரவையின் மீதமுள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் வாக்குப்பதிவின் 6 கட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

மக்களவை தேர்தல்

அதில் 486 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற 6 கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு சுமூகமாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது.

இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பிற பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு வசதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் நடைபெறுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு

வெப்பம் அல்லது மழை அதிகம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அதற்கேற்ப ஏற்பாடுகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அதேநேரம் வாக்குப்பதிவு முடியும் நேரம் தொகுதிக்கேற்ப சில இடங்களில் மாறுபடும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்

மேலும், இன்று (ஜூன் 1) ஒடிசா சட்டப்பேரவையின் எஞ்சியுள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக்கட்ட தேர்தலுக்காக ஏறத்தாழ 1.09 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இறுதி கட்டத்தேர்தல் தொடர்பான பணிகளில் 10.9 லட்சம் பணியாளரக்ள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவில் வாக்களிக்க ஏறத்தாழ 10.06 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி

இவர்களில் 5.24 கோடி பேர் ஆண்கள் என்றும் 4.82 கோடி பேர் பெண்கள் மற்றும் 3 ஆயிரத்து 574 பேர் மூன்றாம் பாலினத்தவர் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். ஏற்கனவே இரண்டு முறை வாரணாசி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி மூன்றாவது முறையாக அங்கு போட்டியிடுகிறார்.

Share This Article
Leave a review