100 சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடிய தமிழ்நாட்டை சேர்ந்த முதல் வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று ஏற்படுத்தினார். அவரது இந்த முக்கியமான நாளில் குடும்பத்தினர் மைதானத்திற்கு வந்து வாழ்த்து தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கேரம் பால் அஸ்வின் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவின் நட்சத்திர மற்றும் முண்ணனி பந்து வீச்சாளார் ஆவார். மூத்த வீரர்களான சச்சின் & டிராவிட் அவர்களுக்கு அடுத்து ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதை பெற்ற ஒரே இந்திய வீரர் அஸ்வின். உலகில் கேரம்பால் வீசுவதில் உலகில் 2 பேர் அவற்றில் இவரும் ஒருவர்.
மேலும் டெஸ்டில் மிகவேகமாக 50, 100, 150, 200, 250 விக்கெட்டுகளைவீழ்த்திய ஒரே இந்திய நபர் அஸ்வின். மேலும் 19- செப்டம்பர் 1986 சென்னையிலுள்ள மேற்கு மாம்பலத்தில் பிறந்தார். பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் படிப்பை முடித்தார். பி.டெக் ஐ.டி பிரிவை எஸ். எஸ்.என் கல்லூரியில் முடித்தார்.
வேகப்பந்து வீச்சாளரான இவரது அப்பா ரவிச்சந்திரன், கிளப் அகாடமி நடத்தி வருகிறார். அம்மா பெயர் சித்ரா .அஸ்வின் அதிகம் ஓடி பந்து வீச கூடாது என்பதற்காக ஸ்பின் பவுலிங்கைதேர்வு செய்ய வைத்தார்.
மேலும் 13 நவம்பர் 2011 அன்று பிரித்தி நாராயணன் என்ற பள்ளிப்பருவ தோழியை கல்யாணம் செய்தார். இவர்களுக்கு அகுரா, ஆத்யா என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட்டில் பங்கேற்றதன் மூலம் அஷ்வின் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 14 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையையும் இன்று ஏற்படுத்தியுள்ளார் அஷ்வின்.
2011 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அஷ்வின் அறிமுகம் ஆனார். இன்று நடந்த ஆட்டத்திலும் அவர் 4