திருத்தணி அருகே பாதயாத்திரை சென்றவர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் இருவர் உயிரிழப்பு. 5 பேர் படுகாயம்.

1 Min Read
பாதயாத்திரை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அன்டபட்டு கிராமத்தை சேர்ந்தவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பதிக்கு பாதயாத்திரை சென்று வந்தனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 37 பேர் குழுவாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை தொடங்கி நடை பயணம் மேற்கொண்டனர்.

இரவு 11மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக குழுவாக சென்று கொண்டிருந்தபோது,

சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற அரசு பேருந்து அதிவேகமாக பின்னால் வந்து மோதிய விபத்தில் சாலையில் பேருந்தும் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் உடல் நசுங்கி சீதாராமன் (20), நாராயணன் (45) இருவர் உயிரிழந்தனர்.

மேலும் முகேஷ் கண்ணன், வடிவேல் அழகன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல் சாலையின் நடுவே கிடந்ததால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோமீட்டர்க்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்று கொண்டிருக்கிறது. பின்னர் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a review