பாலியல் குற்றச்சாட்டு – அரசு பள்ளி ஆசிரியர்கள் 10 பேர் பணியிட மாற்றம்..!

2 Min Read

கோவை மாவட்டம், ஆலாந்துறை அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் ‘அளித்ததாக புகார் எழுந்த நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு அந்தப் பள்ளியின் 10 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

கோவை மாவட்டம், ஆலாந்துறையில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பயிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்

இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெரியவந்தது. இதை அடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டு, டிசம்பர் 5 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்களுக்கு முன் கூட்டியே தெரியும் என்பதும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் உள்ளிட்ட 10 ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் தெரியவந்தது.

சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நபர்

அதேநேரம் பள்ளியில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் படி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்து பள்ளியின் ஓவிய ஆசிரியர் ராஜ்குமார் என்பவர் பள்ளி கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்தது.

அதேபோல் பள்ளியின் தலைமை ஆசிரியரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் உட்பட 6 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

பாலியல் குற்றச்சாட்டு – அரசு பள்ளி ஆசிரியர்கள் 10 பேர் பணியிட மாற்றம்

இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளியே சொல்லக்கூடாது என தன்னை மிரட்டிய 10 ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாணவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

மாணவியின் பெற்றோர் தரப்பில் மாநில குழந்தைகள் நல ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவியிடம் காவல்துறையினர் குழந்தைகள் நல அலுவலர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

பள்ளிகல்வித்துறை

இந்த நிலையில் ஆலந்துறை பள்ளியில் 10 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 6 ஆசிரியர்கள் உள்ளிட்ட 10 பேர் கோவை மாவட்டத்தில் வேறு வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும்,

அடுத்த ஓரிரு நாட்களில் நடைபெற உள்ள பணி நிரவலின் போது ஆலந்துறை பள்ளிக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளனர்.

Share This Article
Leave a review