கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்படும். அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான 20 புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டது. இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று (பிப்.03) வெளியிட்டார்.
100 ஆண்டுகள் பழமையான இப்பல்கலையில் இதுவரை, 905 புதிய பயிர்ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சாகுபடி செய்ததில் இருந்து, 120 முதல் 125 நாட்களில் அறுவடை செய்துகொள்ளலாம். பயிர் ரகங்கள் குறித்து விளக்கமளித்த துணைவேந்தர் கீதாலட்சுமி, இதற்கான விதைகள் தயார்நிலையில் இருப்பதால், விவசாயிகள் வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்தார்.

சுற்றுவட்டார பகுதி விவசாயிகளுக்கு, விதைகளின் மாதிரிகளை கொடுத்து கவுரவித்தார். வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் என 20 புதிய ரகங்கள், தமிழ்நாடு அரசின் மாநிலப் பயிர் ரகங்கள் வெளியீட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில், தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு வருடமும் விவசாயிகளுக்காக புதிய ரகங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். வேளாண் பயிர்களில் நெல்லில் இருவழி வீரிய ஒட்டு ரகம் மற்றும் பாசுமதி அல்லாத வாசனை கொண்ட நீள் சன்ன ரகம் என இரண்டு ரகங்களும், தானிய பயிர்களில் இனிப்புச் சோளம் உட்பட நான்கு புதிய ரகங்களும்,
எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் பசுந்தாள் உரப்பயிர் போன்ற பயிர்களில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பன்னீர் திராட்சை, பலா, வாழை என மூன்று பழப்பயிர்களும், கத்திரி, கொத்தவரை, வெள்ளைத்தண்டுக்கீரை, சிவப்புக்கீரை மற்றும் முருங்கை என ஐந்து காய்கறி பயிர்களும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சிவப்புப் புளி மற்றும் தென்னையில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பன்னீர் திராட்சை, பலா, வாழை என மூன்று பழப்பயிர்களும் கத்திரி, கொத்தவரை, வெள்ளைத்தண்டுக்கீரை, சிவப்புக்கீரை மற்றும் முருங்கை என ஐந்து காய்கறிப் பயிர்களும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விவசாயப் பெருமக்கள் சாகுபடி செய்து பயன்பெறுமாறு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.