ராகுல் காந்தி ராஜினாமா – வயநாடு தொகுதியில் களமிறங்குகிறார் பிரியங்கா காந்தி..!

2 Min Read

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு, ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக் கொள்ள ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய 2 தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் ஏதாவது ஒரு எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எந்த தொகுதியை ராகுல் தக்கவைத்துக் கொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

காங்கிரஸ்

இதுகுறித்து முடிவு செய்ய இன்று தான் கடைசி நாள். இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில், அந்த கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்,பிரியங்கா மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் கார்கே கூறியதாவது;- விதிமுறைகளின்படி, ஒரு தொகுதியில் மட்டுமே ராகுல் எம்.பி.யாக நீடிக்க முடியும். மற்றொரு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எனவே, ரேபரேலி தொகுதியை ராகுல் காந்தி தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

ராகுல் காந்தி ராஜினாமா – வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி

ஏனென்றால் அந்த தொகுதி நீண்ட காலமாக காந்தி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளது. அதேநேரம் ராகுல் காந்தி மீது அன்பு வைத்துள்ள வயநாடு மக்கள், அந்த தொகுதியை ராகுல் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகின்றனர்.

பின்னர், நீண்ட ஆலோசனைக்கு பிறகு, வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராகுல் ராஜினாமா செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

மல்லிகார்ஜுன கார்கே

இதன்மூலம் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளார். இதுகுறித்து பிரியங்கா கூறும் போது;- “ராகுல் ராஜினாமா செய்து விட்டாரே என்று அப்பகுதி மக்கள் வருத்தப்படாத அளவுக்கு கடுமையாக பணியாற்றுவேன்” என்றார்.

Share This Article
Leave a review