ஏ.ஜி.சம்பத்

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 15 இடங்களில் வெல்லும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நக்சலைட் தீவிரவாதிகள் அறிக்கை போல உள்ளது.- விழுப்புரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் ஏ ஜி சம்பத் பேட்டி.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி சம்பத் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சிஅதன் தேர்தல் அறிக்கையில் இந்து விரோத வெளியீடுகள் அதிகம் உள்ளது. இவை அனைத்தையும் பிரதமர் நரேந்திர மோடி செய்கிறார் என்று குற்றம் சாட்டுபவர்களுக்கு மத்தியில் அந்த அறிக்கையை சமூக ஆர்வலர்கள் பொதுநல நோக்கத்தோடு செயல்படும் செயல்பாட்டாளர்கள் அவசியம் படித்து பார்த்து மக்களுக்கு விளக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை என்கிற வாதத்தை முன் வைத்தது காங்கிரஸ்தான், அதன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தான். பாரத பிரதமர் மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல பிரிவினை வாதத்தையும் மதவாதத்தையும் காங்கிரஸ் தான் செய்கிறது. பாகிஸ்தான் பிரிவினைக்கும் முக்கிய காரணம் முன்னால் பிரதமர் நேரு தான் .கிழக்கு பாகிஸ்தான் என்ற நாட்டை பிரித்து பங்களாதேஷ் என அறிவித்தவர் இந்திரா காந்தி. காங்கிரசின் தேர்தல் அறிக்கை தீவிரவாதிகள் அறிக்கை போல உள்ளது. மாவோயிஸடுகள், நக்சல்பாரிகள் அறிக்கை போல உள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி இந்தியா முழுவதும் ஒருவிதமான கூட்டணியும் கேரளாவில் காங்கிரஸுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கூட்டணியும் உள்ளது.

ராகுல் காந்தியை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் ராஜா மனைவி ஆனிராஜா போட்டியிடுகிறார்.சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வலியுறுத்தும் பாமக சமூக நீதிப் பார்வையோடு அதை கருதுகிறது.ஆனால் காங்கிரஸ் சமூக பொருளாதார கணக்கெடுப்பு என்று அறிவிக்கிறது. எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு வழங்கப்படும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை சிறுபான்மையினருக்கு வழங்க வேண்டும் என்கிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை. சாதி இந்துக்களின் சொத்துக்களை சூரையாடுவதற்கு தயாராக இருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் அறிக்கை பின்னணியில் அண்டை நாடுகளில் தூண்டுதல் உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் என்று அறிவித்திருக்கிறது அதற்கான திட்டம் என்ன என்று அறிவிக்கவில்லை தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 15 இடங்களில் வெல்லும் காங்கிரஸ் பிரிவினைவாதத்தை தூண்டுகிறது என்று செய்தியாளர் சந்திப்பில் பாஜக துணைத் தலைவர் ஏ ஜி சம்பத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here