விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து. ரவிக்குமாரை ஆதரித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பிரச்சாரத்தில் மேற்கொண்டார்.

அப்போது திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாரங்கியூர், ஏனாதிமங்கலம், சிறுவானூர், சிறுமதுரை, ஏம்ப்பூர், திருவெண்ணெய்நல்லூர் காந்தி நகர், சின்னசெவலை, டி.எடையார் பகுதியில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது பானை சின்னம் பாடலுக்கு நடனமாடிய அமைச்சர்

அவரது சொந்த ஊரான டி.எடையார் பகுதியில் கூடியிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்த போது பேசிய அமைச்சர், ஒரு காலத்தில் பெண்கள் படிக்க நினைத்தாலும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

ஆனால் இன்று நீங்கள் படிக்காவிட்டாலும் உங்கள் குழந்தைகளை படிக்க வேண்டும் என கண்டித்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பி வைப்பதற்கு காரணம் திராவிடம். ஏனெனில் பெண்கள் படிக்க வேண்டும் என்பதைத்தான் பெரியாரும் அண்ணாவும் திரும்பத் திரும்ப இந்த சமூகத்திற்கு கூறினார்கள்.

பிரச்சாரத்தின் போது பானை சின்னம் பாடலுக்கு நடனமாடிய அமைச்சர்

அப்போது சமூகத்தில் வாழும் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துவதே திராவிடம். பெண்கள் பள்ளிக்கு செல்வதும், அனைத்து மக்களும் கோவிலுக்குள் நுழைவதும் தான் திராவிடம். ஆனால் எல்லோரும் சமம் என்பதை ஏற்காத பாஜகவோடு பாமக கூட்டணி அமைத்துள்ளது.

பாஜக சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான கட்சி. அதனால் தான் மோடி யாரும் வளரக்கூடாது என எண்ணுகிறார். குறிப்பாக தமிழர்கள் நாம் முன்னேறுவது அவருக்கு விருப்பமில்லை.

பிரச்சாரத்தின் போது பானை சின்னம் பாடலுக்கு நடனமாடிய அமைச்சர்

எனவே சென்ற முறை எனக்கு உதயசூரியனில் வாக்களித்தது போல இந்த முறை என் சகோதரர் ரவி குமாருக்கு பானை சின்னத்தில் வாக்களியுங்கள் என கூறினார். அதை தொடர்ந்து கூட்டத்தில் இருந்த தாய்மார்கள் உடன் பேசினார்.

அதன் பின்னர் பிரச்சார வாகனத்தில் பானை சின்னம் பாடல் இசைக்கப்பட்ட போது அமைச்சர் நடனமாடினார். இந்த சம்பவம் அங்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here