தமிழ் பட உலகில் நடிகை மாளவிகா மோகனன் நல்ல வரவேற்பு பெறுவார், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிப்படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த 2013ம் ஆண்டில் மலையாளப்படம் மூலம் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்திருந்தார் மாளவிகா. தொடர்ந்து தமிழில் ரஜினிகாந்துடன் இணைந்து பேட்ட படத்திலும் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் சில காட்சிகளிலேயே அவர் வந்திருந்த போதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, சிறப்பான என்ட்ரியை கொடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து தனுசுடன் மாறன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து, பா.ரஞ்சித் -விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழில் முதல் படம் ரஜினியுடன்
நடிகை மாளவிகா மோகனன்: நடிகை மாளவிகா மோகனன். மலையாளத்தில் கடந்த 2013ம் ஆண்டில் தன்னுடைய அறிமுகத்தை நடிகையாக மேற்கொண்டார். பிரபல ஒளிப்பதிவாளர் மோகனனின் மகளான மாளவிகா, ஒளிப்பதிவு அல்லது இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவே முன்னதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் காலம் வேறு மாதிரியான திட்டத்தை வைத்திருந்தது. இவரை சூட்டிங் ஸ்பாட்டில் பார்த்த இயக்குனர்கள், படத்தில் நடிப்பதற்காக கேட்ட சூழலில் மலையாளத்தில் தன்னுடைய என்ட்ரியை நடிகையாக கொடுத்தார். தொடர்ந்து தமிழிலும் முதல் படத்திலேயே ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு மாளவிகாவிற்கு கிடைத்தது. பேட்ட படத்தில் என்ட்ரி: பேட்ட படத்தில் ரஜினியின் நண்பராக வரும் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மாளவிகா. இந்தப் படத்தில் குறைந்த காட்சிகளிலேயே நடித்திருந்தாலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
தொடர்ந்து அடுத்ததாக விஜய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் மாளவிகாவிற்கு கிடைத்தது. அதை சிறப்பாக பயன்படுத்தி தமிழின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக தன்னை மாற்றிக் கொண்டார். விஜய் படத்தை தொடர்ந்து தனுஷுடன் மாறன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களையே அவருக்கு பெற்றுக் கொடுத்தது.
தங்கலான்
இருந்தபோதிலும் பா ரஞ்சித் – விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு மாளவிகாவிற்கு கிடைத்தது. இந்த படத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்துள்ளார் மாளவிகா. இந்த படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி அவரது கேரக்டருக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. படத்தில் அவருக்கு அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ள சூழலில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மலையாளத்திலும் கிறிஸ்டி படம் மூலம் ஏராளமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ஸீ-த்ரூ புடவையில் மாளவிகா
சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் மாளவிகா மோகனன். அடுத்தடுத்து பிகினியிலும் ஸீ-த்ரூ புடவைகளிலும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற ஸீ-த்ரூ புடவையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிகமான லைக்களையும் பெற்று வருகின்றன. கன்னியாகுமரியில் மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த காஸ்ட்யூமில் அவர் பங்கேற்றதாகவும் மிகப்பெரிய வரவேற்பு காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
குளக்கரையில் மாளவிகா
2024ல் பசங்க தூக்கத்தை கெடுக்கப் போகும் அந்த கனவுக் கன்னி யாரு? டாப் 5 நடிகைகள் லிஸ்ட் ஆறடி வளர்ந்த ஆரஞ்சு பழம்போல இருக்காரே.. மலைக்க வைக்கும் மாளவிகா மோகனன்! ஓஹோ இதுதான் எக்ஸ் தள பதிவோ.. மாளவிகா மோகனனின் ரீசென்ட் போஸ்ட்.. எப்படி இருக்குன்னு பாருங்க குளக்கரையில் காத்திருக்கும் தேவதை.. மாளவிகா மோகனனின் காத்திருப்பு யாருக்கோ!
சூப்பர்