கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் உள்ள மாநகர பேருந்து நிலையம் முன்பாக, நேற்று முன் தினம் அதிகாலை 5 மணி அளவில் ஏராளமான பயணிகள் பேருந்துக்காக காத்து இருந்தனர்.
அப்போது திடீரென்று தனியார் நகர பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புகளை இடித்து கொண்டு, நின்று இருந்த மற்றொரு பேருந்தில் மோதி நின்றது. பேருந்து மோதியதிலும், தடுப்புகள் விழுந்ததிலும், 8 பொதுமக்கள் லேசான காயம் ஏற்பட்டது.

இந்த சிசிடிவி காட்சிகள், கட்டுப்பாட்டை இழந்த பேருந்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக காட்டூர் போக்குவரத்து பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் தனியார் நகர பேருந்தில் பிரேக் திடீரென பிடிக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் தனியார் பேருந்து ஓட்டுனரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றார்கள்.

பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மீது தனியார் பேருந்து மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.