கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா..!

1 Min Read

கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இதனை தொடர்ந்து 10 ஆம் தேதி முதல் மகாபாரதம் சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது.

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா

மேலும் ஏப்ரல் 12 ஆம் தேதி பீஷ்மர் பிறப்பு மற்றும் 14 ஆம் தேதி பாஞ்சாலி பிறப்பும், ஏப்ரல் 17 ஆம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும் மற்றும் சுவாமி வீதியுலாவும் 21 ஆம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாயம் நடைபெறுகிறது.

மேலும் 22 ஆம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும், சித்திரை பெருவிழாவின் முக்கிய விழாவான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருநங்கைகள்

அன்றைய தினம் மாலை இந்தியா முழுவதும் இருந்து வரும் திருநங்கைகள் கோயில் பூசாரி கையினால் தாலி கட்டி கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து ஏப்ரல் 24 ஆம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது. மேலும் ஏப்ரல் 25 ஆம் தேதி விடையாத்தியும், 26 ஆம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.

Share This Article
Leave a review