சென்னை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் விக்கிரவாண்டி காவலாளிக்கு 10 சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுக்கா சின்னப்பாண்டி கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல் வயது 53. இவர் சென்னை பெருங்குடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அங்கு கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை பெருங்குடியை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனே இது சம்பந்தமாக அந்த சிறுமியின் பெற்றோர் சென்னை துரைப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் மைக்கிலை கைது செய்து, அவர் மீது செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி தமிழரசி கைதான மைக்கேலுக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 15,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரத்து வழங்க கோரியும் உத்தரவு விட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் புவனேஸ்வரி ஆஜரானார்.