பாஜக தலைவர் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு. சிறுபான்மையர் மக்களின் எதிர்ப்பையும் மீறி மாதா சிலைக்கு மாலை அணிவித்த காரணத்தால் காவல்துறையினர் நடவடிக்கை.
ஊழலுக்கு எதிராகவும், மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்திலும், ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் பாஜக தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை நடத்தி வருகிறார். இந்த பாத யாத்திரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. இவர் கடந்த 8 ஆம் தேதி அன்று தருமபுரி மாவட்டத்தில் என் மண், எண் மக்கள் பாத யாத்திரையில் கலந்துக்கொண்டு நடைபயணம் மேற்கொண்dஉ வருகிறார்.

அப்போது பி. பள்ளிப்பட்டி லூர்து அன்னை பேராலயத்தில் எந்த ஒரு முன் அறிவிப்பு இன்றி சிறுபான்மையர் மக்களின் எதிர்ப்பையும் மீறி மாதா சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அண்ணாமலை சென்றார். அப்போது அருகேயிருந்த இளைஞர்கள், மணிப்பூர் சம்பவம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி ஏன் மணிப்பூர் விவகாரத்தில் பாஜக தலையிடவில்லை என விவாதித்து, மாதா சிலைக்கு மாலை அணிவிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்பு அண்ணாமலையிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்களை அறிய இருந்த காவல்துறையினர் அப்புறப்படுத்திய பின்பு மாதா சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்து சென்றார். இதனை அறிந்த அப்பகுதி சிறுபான்மையினர் மக்கள் அந்த மாலையை அப்புறப்படுத்தி தூக்கி வீசி சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பொம்மிடி காவல் நிலையத்தில் கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், பாஜக தலைவர் அண்ணாமலை மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதாவது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு பேசுவது, பொது அமைதியை குலைக்க தூண்டும் வகையில் பேசுவது, வெவ்வேறு வகுப்புகளுக்கிடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் பேசுவது என 153 (A)(a), 504, 505 (2) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது பொம்மிடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.