அதிமுகவிற்கு போட்டி திமுக மட்டும் தான் – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

4 Min Read

அதிமுகவிற்கு போட்டி திமுக மட்டும் தான், திமுக – பாஜகவிற்கு போட்டி என மற்றவர்கள் சும்மா சொல்வார்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். அதிமுகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என தப்பு தப்பா கிளப்பி விடுகின்றனர். கட்சியினர் சோர்வாகிவிட கூடாது எனவும் கூட்டணியை பொதுசெயலாளர் பார்த்து கொள்வார் எனவும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர் குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து வரும் 9-ம் தேதி திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதிமுகவிற்கு போட்டி திமுக மட்டும் தான் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

அதில் கோவை வடக்கு எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி அருண்குமார்,சிங்காநல்லூர் எம்.எல்.ஏ ஜெயராம்,வால்பாறை எம்.எல்.ஏ அமல் கந்தசாமி, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ செல்வராஜ், கிணத்துகடவு எம்.எல்.ஏ தமோதரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.ஜி.ஆரை பற்றி மோசமான வார்த்தையில் ஆ.ராசா விமர்சித்துள்ளார்.

ஜெ பிறந்தநாள் 24-ம் தேதி நடைபெறுகின்றது. தெருமுனை பிரச்சாரங்கள் நடத்துவது ஆகிய இந்த 3 விவகாரம் குறித்து ஆலோசிக்க கூடியுள்ளோம் என தெரிவித்தார். அவினாசியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிகமான கூட்டத்தை சேர்க்க வேண்டும் என தெரிவித்த அவர், ஆ. ராசா முன்பு எடப்பாடியாரின் தாயாரை விமர்சித்தார்.

அதிமுகவிற்கு போட்டி திமுக மட்டும் தான் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

இன்று எம்.ஜி.ஆரையும் விமர்சித்துள்ளார் என தெரிவித்த அவர், ஆ.ராசாவை திமுக தலைவர் ஸ்டாலின் இப்பொழுது வரை கண்டிக்கவில்லை எனவும் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வர காரணம் எம்.ஜி.ஆர் எனவும், ஒப்பற்ற தலைவராக இருந்த எம்.ஜி.ஆரை இப்படி பேசி இருக்கின்றார். திமுக தலைமை ஆ.ராசாவை கண்டித்து இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மக்கள் நிச்சயம் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்த அவர், நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தான் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என அவனாசியில் ஆர்ப்பாட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி நடத்துகின்றார் எனவும் லட்சகணக்கான தொண்டர்களை இதில் இணைத்து போராட்டம் நடத்த இருக்கின்றோம். கோபத்தை காட்ட வேண்டிய இடம் அவனாசி, அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதிமுகவிற்கு போட்டி திமுக மட்டும் தான் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

3 ஆண்டு காலத்தில் எந்த திட்டத்தையும் செய்யாத ஆட்சி திமுக ஆட்சி எனவும் அவர் தெரிவித்தார். அதிமுகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என கிளப்பி கொண்டே இருப்பார்கள் என தெரிவித்த அவர், திமுகவிற்கு ஓட்டு போட யாரும் தயாராக இல்லை எனவும், அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் இருந்து போவார்கள் எனவும் தெரிவித்தார். 85 வயசானவர்கள் ஒரு சிலர் இந்த கட்சியை விட்டு போவார்கள்.

நம்முடைய பணிகளை விசுவாசமாக செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். நமக்கு போட்டி திமுக மட்டும்தான். மற்றவர்கள் சும்மா எதாவது சொல்வார்கள், திமுக – பாஜகவிற்கு போட்டி என்று சொல்வார்கள் எனவும் தெரிவித்தார். கூட்டணியை பொதுசெயலாளர் பார்த்து கொள்வார். யாரும் கூட்டணிக்கு வர வில்லை என தப்பு தப்பா கிளப்பி விடுகின்றனர்.

அதிமுகவிற்கு போட்டி திமுக மட்டும் தான் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கட்சியினர் சோர்வாகிவிட கூடாது நமக்கு எதிரி திமுக மட்டுமே என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீலகிரி எம்பி ராசா எம்.ஜி.ஆர் குறித்து அவதூறாக பேசி இருக்கின்றார். மோசமான வார்த்தையில் ஆ.ராசா பேசி இருக்கின்றார்.

ராசாவையும், அவரை கண்டிக்காத திமுக தலைமையை கண்டித்தும் வரும் 9-ம் தேதி அவனாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் பொது செயலாளர் எடப்பாடி தலைமை தாங்குகின்றார் எனவும் தெரிவித்தார். 3 வருடமாக திமுக அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இவற்றை தெருமுனை பிரச்சாரங்கள் மூலம் கொண்டு செல்ல இருக்கின்றோம்.

அதிமுகவிற்கு போட்டி திமுக மட்டும் தான் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்தார். அதிகாரிகள் திமுக பொறுப்பாளர்களை போல செயல்படுகின்றனர் என தெரிவித்த அவர், கோவை மாவட்டத்தில் எந்த திட்டமுமே வரவில்லை. குடிநீர் பிரச்சினை இருக்கின்றது. மக்கள் பிரச்சினைக்காக மாவட்ட ஆட்சியரை சந்திக்க நேரம் கேட்டு இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்கும் என்று ஓபிஎஸ் பேசியிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் எஸ்.பி.வேலுமணி கிளம்பி சென்றார்.

Share This Article
Leave a review