முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முதுகலை ஆசிரியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்..!

1 Min Read

கோவையில் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

- Advertisement -
Ad imageAd image

பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களை அருகில் ஒதுக்கி தர வேண்டும் என முதுகலை ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுகின்றனர். பொதுத் தேர்வுகளுக்கான தேதி மார்ச் 1 ஆம் தேதி முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் துவங்க உள்ளன.

முதுகலை ஆசிரியர் சங்கம்

இந்த நிலையில் கோவையில் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பணிகளுக்கு செல்லும் தேர்வு மையங்கள் மிக தொலைவில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் பல்வேறு ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிய இருப்பதாகவும் எனவே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிற்குள் இருக்கின்ற பள்ளிகளில் தேர்வு மையத்தை ஒதுக்கி தர வலியுறுத்தி கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முதுகலை ஆசிரியர் சங்கம் சார்பில் தர்ணா

ஆனால் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் நாளை முதல் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய அவர்கள் தேர்வு மையங்கள் மிக தொலைவில் இருப்பதால் இருப்பிடத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு செல்லும் நேரமே 2 மணி நேரத்திற்கும் மேலாகும்.

முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முதுகலை ஆசிரியர் சங்கம் சார்பில் தர்ணா

அப்போது அங்கு தேர்வு பணிகள் முடியும் வரை காத்திருந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் அதற்கு மறுநாளே மறுபடியும் தொலைதூரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் தேர்வு மையங்களை அருகாமையிலேயே மாற்றித் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

Share This Article
Leave a review