அரசு பள்ளி சுற்றுச்சுவரில் காவி திருவள்ளுவர் ஓவியம் அழிப்பு – பாஜகவினர் எதிர்ப்பு..!

2 Min Read

ஈரோடு அருகே அரசு பள்ளி சுற்றுச்சுவரில் வரையப்பட்ட காவி உடையிலான திருவள்ளுவர் உருவப்படத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிளுடன் பாரதிய ஜனதா கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள பேரோடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு, பள்ளி நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம், பள்ளி சுற்றுச்சுவரில், பல்வேறு சித்திரங்களை வரைந்துள்ளனர். ஈரோடு வட்டம், பேரோடு கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சுற்றுச் சுவரில் ஆறு மாதங்களுக்கு முன்பாக பல்வேறு தலைவர்களின் படங்கள் வரையப்பட்டன.

காவி திருவள்ளுவர் ஓவியம் அழிப்பு பாஜகவினர் எதிர்ப்பு

அதில் திருவள்ளுவர் படத்திற்கு காவி கலர் உடை அணிந்து இருப்பது போல வரையப்பட்ட படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று சுவரில் உள்ள காவி திருவள்ளுவர் படத்தை வெள்ளை நிறமாக மாற்ற பள்ளிக்கல்வி துறை முடிவு செய்தது. அப்போது காவல்துறை உதவியுடன் பள்ளி நிர்வாகம் இணைந்து காவி நிறத்தை அழித்து, வெள்ளை உடை திருவள்ளுவரை வரைந்தனர். இந்த அரசு பள்ளி சுற்றுச்சுவரில் வரையப்பட்ட காவி உடையிலான திருவள்ளுவர் உருவப்படத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிளுடன் பாரதிய ஜனதா கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், அதில் இடம்பெற்றுள்ள திருவள்ளுவரின் உருவப்படம், காவிய உடையில் இருப்பதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், அதனை மாற்றி அமைக்க வேண்டும் எனக்கூறி பள்ளி கல்வித்துறை அலுவலகம் மற்றும் சித்தோடு காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இன்று (ஜன.30) போலீஸ் பாதுகாப்புடன் வந்த அதிகாரிகள், திருவள்ளுவரின் உருவப்படத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

திருவள்ளுவரின் புகைப்படத்தை அழித்த அதிகாரிகள்

இதனிடையே, சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினர், காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் உருவப்படத்தை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பணியை தடுக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் வரைந்த காவி திருவள்ளுவர் படம் அப்படியே இருக்க வேண்டும் என்ற கோஷம் எழுப்பினர்.

எனினும் பாஜக-வினரின் எதிர்ப்பையும் மீறி, காவி உடையில் இருந்த திருவள்ளுவரின் புகைப்படத்தை அழித்த அதிகாரிகள், அதற்கு மாற்றாக வெள்ளை உடையில் இருப்பது போன்ற திருவள்ளுவரின் உருவப்படம் வரையப்படும் எனத் தெரிவித்தனர். அந்த எதிர்ப்பையும் மீறி காவி திருவள்ளுவர் படம் அழிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share This Article
Leave a review