மதுரை மாநகராட்சி அதிகாரிகள், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், கழிவுநீரில் இருந்து துர்நாற்றத்துடன் மலை போல் வெளியேறும் பஞ்சு போன்ற நுறை. அப்பகுதியில் வழியாக செல்லும் பொதுமக்கள் நின்று செல்பி எடுத்துச் செல்லும் வாகன ஓட்டிகள். சமுக வலைதளங்களில் வைரல்.
மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் உள்ள அயன் பாப்பாக்குடியில் தொடர் மழையால் வெள்ளக்கல் போன்ற குப்பை, கிடங்கில் இருந்து மலை போல் வெளியேறும் பஞ்சு. கழிவுநீர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர், மழை நீரோடு கலந்து, அயன்பாப்பாக்குடி கண்மாயில் பாசன கால்வாயில் திறந்து விடப்படுவதால் பல்வேறு பகுதியிலிருந்து திறந்து விடப்படும் கழிவுநீர்கள் கண்மாயில் கலப்பதால் அயல் பாப்பாக்குடி கண்மாயிலிருந்து வெள்ளக்கல் வழியாக மறுகால் பாயும் இடத்தில் நீரின் வேகம் அதிகமாக செல்வதால் மறுகால் பாயும் பாலத்தின் அருகில் ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளதாலும் நீரின் வேகத்தை அந்த ஆகாயத்தாமரைகள் கட்டுப்படுத்தி வருகிறது.

இதனால் வெள்ளக்கல் பகுதியில் மறுகால் பாயும் இடத்தில் கழிவுநீரில் இருந்து துர்நாற்றத்துடன் மலை போல் வெளியேறும் பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை பொங்கி வருகிறது போல் காட்சியளித்ததது. மேலும் பஞ்சு நுரை மலை போல் பெருகி, காற்றில் அங்கும் இங்கும் பறந்து, அருகே உள்ள மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் பறப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று வெள்ளைக்கல் பஞ்சு நுரை மலை போல் எழுந்து காட்சி அளிக்கும் சம்பவம் நடந்ததது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அந்த நுரை மலை போல் பஞ்சு அருகில் நின்று, செல்பி எடுத்துக் செல்கின்றனர். இந்த சம்பவம் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், நேற்று அனைத்து தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்ட பின்னரும், மதுரை மாநகராட்சி அதிகாரிகள், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மலை போல் நுரை பஞ்சு சாலையை சென்றடைந்து விமான நிலையத்திலிருந்து அவனியாபுரம் நோக்கி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தையும், விபத்தையும் ஏற்படுத்த உள்ளது.

இதை தமிழக அரசு உடனடியாக கவனத்தில் எடுத்து கொண்டு இதை சரி செய்து, இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க வழி வகை செய்ய வேண்டும் என்று வெள்ளை கல்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.