தமிழ்நாட்டில் மிக்ஜம் புயலில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு உதவிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!

2 Min Read

தமிழ்நாட்டில் மிக்ஜம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீண்டும் வர முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கிய முதல்வர் மு.க ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதியளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாட்டில் மிக்ஜம் புயலால் கடந்த டிசம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை என்பது, 47 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிலான பெரும் மழை ஆகும். இந்த இயற்கை பேரிடரால் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரிடர் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள பேரிடர் ஆகும். அதேபோல் மழைநீர் வடிகால் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தி இருந்ததால் தான் பேரழிவு தவிர்க்கப்பட்டது.

முதல்வர் மு.க ஸ்டாலின்

அதனை தொடர்ந்து அனைத்து துறைகளும் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வைத்திருந்ததும், இணைந்து மக்களை காத்துள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு வீச்சில் நடைபெற்ற மீட்பு பணிகளின் காரணமாக மூன்று நாட்களுக்குள் பெரும்பாலான இடங்கள் மீட்கப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மீட்பு பணி நடந்து வருகிறது. இத்தகைய அசாதாரணமான நேரத்தில் அனைத்து தரப்பும் மக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த பேரிடர் பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதற்கு உதவியாக நல்லுள்ளங்கள் பலர் முதல்வரின் பொது நிவாரண நீதிக்கு தங்களுடைய பங்களிப்பை வழங்குகின்றனர்.

முதல்வர் மு.க ஸ்டாலின்

அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த இயற்கை பேரிடரில் இருந்து வீழ்வதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டியது அவசியமாகிறது. எனவே அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். இச்சூழலில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுகின்றேன். அதன் தொடக்கமாக என்னுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share This Article
Leave a review