தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி வரவுள்ள நிலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம், அருகே ராமநாதபுரம் பகுதியில் தனியார் (அல்வேனியா) மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.

அப்போது இந்த பள்ளிக்கு இன்று மதியம் மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளி நிர்வாகத்தின் இமெயில் குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில்;- அப்போது வேறொரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் இந்த பள்ளியின் பெயர் இமெயிலில் டேக் செய்துள்ளதாகவும், ஆனால் இங்குள்ள பள்ளிக்கு மெயில் எதுவும் வரவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் என செய்தி வெளியாகிய நிலையில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளியின் முன்பு கூடி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இன்று கோவை மாவட்டத்துக்கு வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.