BGR Energy நிறுவனத்துக்கு ஆதரவாக ரூ.4,442 கோடி மதிப்பிலான ETPS திட்டம் – அண்ணாமலை குற்றச்சாட்டு

1 Min Read

BGR Energy நிறுவனத்துக்கு ஆதரவாக, ₹4,442 கோடி மதிப்பிலான ETPS திட்டத்தை அந்த நிறுவனத்துக்கே மீண்டும் வழங்கியதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு மின்சார வாரியம், ஒரு துணை மின்நிலையத்தை அமைப்பதற்காக BGR Energy நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒரு சிறிய ஒப்பந்தத்தை, பணியை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக ரத்து செய்துள்ளது.

இதுபோன்ற ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, அரசுக் கருவூலத்துக்கு இழப்பை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு மின்சார வாரியம் தயாராகி வருகிறது என்றும் அறிகிறோம்.

முதலமைச்சர் ஸ்டாலின்

அப்படியானால், BGR Energy நிறுவனத்துக்கு ஆதரவாக, ₹4,442 கோடி மதிப்பிலான ETPS திட்டத்தை அந்த நிறுவனத்துக்கே மீண்டும் வழங்கியதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு BGR Energy நிறுவனத்துக்கு மீண்டும் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை, அந்த நிறுவனம் தொடங்க இயலாமல் காலம் தாழ்த்தியதால், தமிழ்நாடு மின்சார வாரியம், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதனை கண்டித்து கடிதம் எழுதியது. ஒரு சிறிய துணை மின்நிலையத் திட்டத்தை நிதிப் பற்றாக்குறையால் செயல்படுத்த முடியாத நிறுவனம், எப்படி ஒரு மின் உற்பத்தி நிலையத்தை செயல்படுத்துவார்கள் என்ற கேள்வியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review