மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
டெல்லி முதல்வரும், “இந்தியா” கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த ஆம் ஆத்மி அழைப்பு விடுத்திருக்கிறது.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறைவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது .
இந்த சம்மன்களை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சுரேஷ் குமார் கெய்த், மனோஜ் ஜெயின் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கேஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அவர் கூறும்போது, “மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத் துறை முயற்சி செய்கிறது. இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்றார்.
அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார். பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்திருந்தார் .
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் கோரப்படுகிறது. இப்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22-ம் தேதி நடைபெறும்” என்று தெரிவித்தனர்.
கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள கெஜ்ரிவாலின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இரவு 9.20 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.
முதல்வர் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார். சிறையில் இருந்து அரசை வழிநடத்துவார் என்று ஆம் ஆத்மி கட்சி தலைமை அறிவித்துள்ளது . மேலும் , கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்களும் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே மனு தள்ளுபடியான உடனே கைது வாரண்டுடன் நேற்று இரவு அரவிந்த கெஜ்ரிவால் வீட்டை அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர் . சுமார் நன்கு மணி நேர ரெய்டுக்கு பின்னர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் .
கடந்த இரண்டு மாதங்களில் கைது செய்யப்பட்ட முதலைச்சர்கள் வரிசையில் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் . அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன .
அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘பயந்துபோன சர்வாதிகாரி இறந்த ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார்.
ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களை மிரட்டி பணம் பறிப்பது, பிரதான எதிர்க்கட்சியின் கணக்கை முடக்குவது ‘அசாதாரண சக்திக்கு’ போதாதென்று, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை கைது செய்வதும் சகஜமாகி விட்டது. விஷயம்.
இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்’. என்று பதிவு செய்து தனத்தை கண்டனத்தை பதிவு செய்துள்ளார் .